அடி முத்து முத்து மாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராம நாராயணன்சுவர்ணலதாஎஸ்.ஏ.ராஜ்குமார்படைவீட்டு அம்மன்

Adi Muthu Muthu Mari Song Lyrics in Tamil


BGM

பெண் : மாயி மகமாயி மணிமந்திர சேகரியே…
ஆயி உமையானவளே ஆதி சிவன் தேவியரே…
சமைத்தால் சமயபுரம் சாதித்தால் கண்ணபுரம்…
அந்த கண்ணபுரத்து எல்லைய விட்டு என் அம்மா…
நீ கடுகு வர வேணுமடி…

BGM

பெண் : அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…
அஞ்சு குடைக்காரி தஞ்சாவூரு மாரி…
தஞ்சம் என வந்தோரை காத்து நிக்கும் தேவி…

பெண் : பம்பை காரியே இந்த வம்பு ஏனடி…
அடி பம்பை காரியே இந்த வம்பு ஏனடி…

பெண் : அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…

BGM

பெண் : வெள்ளிமலை நாயகி வேலனுக்கு தாயடி…
வேம்பு ரதம் ஏறி வந்து வினையை தீர்க்கனும்…

BGM

பெண் : நாராயணன் தங்கச்சி நல்லமுத்து மாரியே…
தங்க ரதம் ஏறி வந்து தாயை காக்கணும்…

பெண் : என் பம்பை சத்தம் கேட்கலையோ கருமாரியே…
இந்த பானகமும் ருசிக்கலையோ பூமாரியே…
என் மாளிகையின் மணிக்கதவும் திறக்கவில்லையோ…

பெண் : அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…

BGM

பெண் : வேம்பினிலே உடையடி வைகையாறு கடையடி…
சாம்பிராணி வாசத்தோடு சங்கரி வாரனும்…

BGM

பெண் : அஞ்சு தலை நாகினி ஆயிரம் கண் நாயகி
முண்டக்கண்ணி மோகினி வந்து முத்து எடுக்கனும்…

பெண் : ஆதி மீனாட்சி தாயே நீ பெண் இல்லையா…
இங்கே பாலன் படும்பாட்டை பார்க்க கண்ணில்லையா…
உன் பாளையத்து ஆலயத்தில் பாசம் இல்லையா…

பெண் : அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…
அஞ்சு குடைக்காரி தஞ்சாவூரு மாரி…
தஞ்சம் என வந்தோரை காத்து நிக்கும் தேவி…

பெண் : பம்பை காரியே இந்த வம்பு ஏனடி…
அடி பம்பை காரியே இந்த வம்பு ஏனடி…

பெண் : அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…

BGM


Notes : Adi Muthu Muthu Mari Song Lyrics in Tamil. This Song from Padai Veetu Amman (2001). Song Lyrics penned by Rama Narayanan. அடி முத்து முத்து மாரி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top