பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | ஆர்.டி. பர்மன் | பூமழை பொழியுது |
Nadiya Nadiya Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நதியா நதியா நைல் நதியா…
நதி போல் நெளியும் நடையா…
இடைதான் கொடியா கொடி மேல் கனியா…
கொண்டாட நான் இல்லையா…
பெண் : நதியா நதியா நைல் நதியா…
நதி போல் நெளியும் நடையா…
இடைதான் கொடியா கொடி மேல் கனியா…
கொண்டாட நீயில்லையா…
—BGM—
ஆண் : ஒரு பூமழைதான் இங்கு பொழியுது பார்…
நீ புன்னகை புரிகையிலே…
தேன் மழைதான் கண்ணில் வழியுது பார்…
நீ தரிசனம் தருகையிலே…
பெண் : மழை தூரலிலும் பனி சாரலிலும்…
உடல் குளிர் கொண்டு தவிப்பதென்ன…
கண்படவும் நீ கை தொடவும்…
அந்த குளிர் விட்டு போவதென்ன…
ஆண் : ராத்திரியில் நம் ராஜ்யத்தில்…
ஓர் நீரோடை பாய்வதென்ன…
பெண் : அதுதான் அதுதான் உனக்கும் எனக்கும்…
கொண்டாட்டம் கும்மாளம்…
ஆண் : நதியா நதியா நைல் நதியா…
நதி போல் நெளியும் நடையா…
பெண் : இடைதான் கொடியா கொடி மேல் கனியா…
ஆண் : கொண்டாட நான் இல்லையா…
—BGM—
பெண் : ஒரு ஏடிருக்கு கதை எழுதி வைத்து…
நீ இரவினில் படிப்பதற்கு…
ஏங்குதையா சிறு தாமரை பூ…
நீ தேனள்ளி குடிப்பதற்கு…
ஆண் : சிறு பூவிருக்கு இளங்குருவி வந்து…
மழை காலத்தில் படுப்பதற்கு…
பாலிருக்கு மலை பழமிருக்கு…
கொண்ட பசியினை தணிப்பதற்கு…
பெண் : கால் தொடங்கி மலர் கூந்தல் வரை…
உன் கை வண்ணம் கண்டாலென்ன…
ஆண் : மெதுவா மெதுவா வரவா வரவா…
ஒண்ணோடு ஒண்ணாக…
பெண் : நதியா நதியா நைல் நதியா…
நதி போல் நெளியும் நடையா…
இடைதான் கொடியா கொடி மேல் கனியா…
கொண்டாட நீயில்லையா…
ஆண் : நதியா நதியா நைல் நதியா…
நதி போல் நெளியும் நடையா…
இடைதான் கொடியா கொடி மேல் கனியா…
கொண்டாட நான் இல்லையா…
—BGM—
Notes : Nadiya Nadiya Song Lyrics in Tamil. This Song from Poo Mazhai Pozhiyuthu (1987). Song Lyrics penned by Vaali. நதியா நதியா பாடல் வரிகள்.