Category Archives: காதலர் தினம்

காதலர் தினம்

நெனச்சபடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎம்.ஜி. ஸ்ரீகுமார், ஸ்ரீனிவாஸ், கங்கா சித்தராசு & காஞ்சனாஏ.ஆர்.ரகுமான்காதலர் தினம்

Nenachapadi Song Lyrics in Tamil


BGM

பெண் : நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி…

பெண் : நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…

ஆண் & பெண் : நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ…
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ…

ஆண் : என் தோள்களே தோட்டம் என்று…
என்னாளுமே தொத்திக்கொள்ளும்…
காற்றல்லவா நீ என் கண்ணே…

ஆண் : கல்யாண நாளில் மாலை கொள்ள…
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல…
அந்த வானம் நந்தவனம் ஆகும்…

பெண் : மருதாணிக் கோலம் போட்டு…
மணிக்கையில் வளையல் பூட்டு…
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு…

பெண் : மருதாணிக் கோலம் போட்டு…
மணிக்கையில் வளையல் பூட்டு…
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு…

ஆண் : உன் கணவன் நாளைதான் வர வேண்டும்…
உயிர்க் காதல் நெஞ்சையே தர வேண்டும்…

ஆண் : மணப்பந்தல் தோரணம் நான் போட…
மணவாளனோடு உன் கைகூட…
உன் தந்தை உள்ளந்தான் ஊஞ்சல் ஆட…

BGM

ஆண் : காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை…
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை…

BGM

ஆண் : காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை…
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை…

ஆண் : வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக…
வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக…

ஆண் : என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்…
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்…

ஆண் : என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்…
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்…

ஆண் : இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்…
நீ வாழ்க… நலமாக… நீ வாழ்க… நலமாக…

பெண் : நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…

ஆண் & பெண் : நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ…
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ…

BGM

ஆண் : அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி…
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி…

BGM

ஆண் : அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி…
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி…
ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி…
அன்னமிவள் மேடை வந்தால் மின்னல் முகம் காட்டி…

ஆண் : கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணை…
தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை…

BGM

பெண் : கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணை…
தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை…

ஆண் : இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ என்றும் பூக்கள் தூவும்…
நீ வாழ்க… நலமாக…

BGM

பெண் : நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…

ஆண் & பெண் : நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ…

பெண் : மருதாணிக் கோலம் போட்டு…
மணிக்கையில் வளையல் பூட்டு…
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு…

பெண் : மருதாணிக் கோலம் போட்டு…
மணிக்கையில் வளையல் பூட்டு…
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு…


Notes : Nenachapadi Song Lyrics in Tamil. This Song from Kadhalar Dhinam (1999). Song Lyrics penned by Vaali. நெனச்சபடி பாடல் வரிகள்.


என்ன விலையழகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉன்னி மேனன்ஏ.ஆர்.ரகுமான்காதலர் தினம்

Enna Vilai Azhage Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன விலையழகே… என்ன விலையழகே…
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்…
விலை உயிர் என்றாலும் தருவேன்…
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…

ஆண் : என்ன விலையழகே…
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்…
விலை உயிர் என்றாலும் தருவேன்…
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்… ஓ…
ஒரு மொழியில்லாமல்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…

BGM

ஆண் : படைத்தான் இறைவன் உனையே…
மலைத்தான் உடனே அவனே…

ஆண் : அழகைப் படைக்கும் திறமை முழுக்க…
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது…
விடிய விடிய மடியில் கிடக்கும்…
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி…

ஆண் : விரைவினில் வந்து கலந்திடு…
விரல்பட மெல்லக் கனிந்திடு…
உடல் மட்டும் இங்கு கிடக்குது…
உடன் வந்து நீயும் உயிர் கொடு…

ஆண் : பல்லவன் சிற்பிகள் அன்று…
பண்ணிய சிற்பத்தில் ஒன்று…
பெண்ணென வந்தது இன்று சிலையே…

ஆண் : பல்லவன் சிற்பிகள் அன்று…
பண்ணிய சிற்பத்தில் ஒன்று…
பெண்ணென வந்தது இன்று சிலையே…
உந்தன் அழகுக்கில்லை ஈடு…

ஆண் : என்ன விலையழகே…
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்…
விலை உயிர் என்றாலும் தருவேன்…
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்… ஓ…
ஒரு மொழியில்லாமல்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…

BGM

ஆண் : உயிரே உனையே நினைத்து…
விழிநீர் மழையில் நனைந்து…
இமையில் இருக்கும் இரவு உறக்கம்…
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு…
நிலவு எரிக்க நினைவு கொதிக்க…
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு…

ஆண் : தினம் தினம் உனை நினைக்கிறேன்…
துரும்பென உடல் இளைக்கிறேன்…

ஆண் : உயிர் கொண்டு வரும் பதுமையே…
உனைவிட இல்லை புதுமையே…

ஆண் : உன் புகழ் வையமும் சொல்ல…
சிற்றன வாசலில் உள்ள…
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே…

ஆண் : உன் புகழ் வையமும் சொல்ல…
சிற்றன வாசலில் உள்ள…
சித்திரம் வெட்குது மெல்ல…
நல்ல நாள் உனைச் நானும் சேரும் நாள்தான்

ஆண் : என்ன விலையழகே…
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்…
விலை உயிர் என்றாலும் தருவேன்…
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்… ஓ…
ஒரு மொழியில்லாமல்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…


Notes : Enna Vilai Azhage Song Lyrics in Tamil. This Song from Kadhalar Dhinam (1999). Song Lyrics penned by Vaali. என்ன விலையழகே பாடல் வரிகள்.


காதலெனும் தேர்வெழுதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்காதலர் தினம்

Kadhalenum Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…

BGM

ஆண் : ஐ லவ் யூ ரோஜா…
பெண் : ஐ லவ் யூ ராஜா…

BGM

ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…

ஆண் : உன் எண்ணம் என்னும் ஏட்டில்…
என் என்னை பார்த்த போது…
நானே என்னை நம்ப வில்லை…
எந்தன் கண்ணை நம்பவில்லை…

பெண் : உண்மை உண்மை உண்மை உண்மை…
அன்பே உன்மேல் உண்மை…
உன் வசம் எந்தன் பெண்மை…

பெண் : டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…

BGM

ஆண் : ஆஆஆ… இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா…
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா…

BGM

ஆண் : இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா…
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா…

பெண் : சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது…
மென்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ…

ஆண் : இது கன்னங்களா இல்லை தென்னங்களா…
பெண் : இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா…

ஆண் : இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக…
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக…

BGM

ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…

பெண் : டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…

BGM

பெண் : ஆஆஆ… உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்…
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்…

ஆண் : மனம் இதற்கென கிடந்தது தவம் தவம்…
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்…

பெண் : என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை…
கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை…

பெண் : இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்…
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்… ம்ம்ம்…ஆஆஆ…

ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…

பெண் : டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…

ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…

BGM


Notes : Kadhalenum Song Lyrics in Tamil. This Song from Kadhalar Dhinam (1999). Song Lyrics penned by Vaali. காதலெனும் தேர்வெழுதி பாடல் வரிகள்.


ஓ மரியா ஓ மரியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதேவன் ஏகாம்பரம், யுகேந்திரன் & ஃபெபி மணிஏ.ஆர்.ரகுமான்காதலர் தினம்

O Maria Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ மரியா ஓ மரியா…
ஓ மரியா ஓ மரியா…
ப்ரூட் செரியா நீ வரியா…
ஈ.மெயிலில் லவ் லெட்டர் தரியா…
பெண் : ல ல ல ல ல ல… ல ல ல ல லா…

ஆண் : ஓ மரியா ஓ மரியா…
ஓ மரியா ஓ மரியா…
ப்ரூட் செரியா நீ வரியா…
ஈ.மெயிலில் லவ் லெட்டர் தரியா…

ஆண் : கடலுக்கு பிஷ்ஷிங்நெட்டு…
காதலுக்கு இன்டர்நெட்டு…
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை…
பெண் : ல ல ல ல ல ல… ல ல ல ல லா…

BGM

ஆண் : மௌனம் என்றொரு சாவியை போட்டு…
மனதை பூட்டாதே…
காதலை ஆயுள் கைதி என்றாக்கி…
காவலில் வைக்காதே…

ஆண் : இதயம் திறந்து பறந்தோடி வா…
இருக்கு நெட் அட்ரஸ் விரைந்தோடி வா…

ஆண் : கம்ப்யூட்டரில் காதல் செய்யும் காலம் இனி…
காதல் விதை காற்றோடு தூவி…
காதல் மயம் ஆகட்டும் பூமி…
ஓ மரியா ஓ மரியா…

ஆண் : ஓ மரியா ஓ மரியா…
ஓ மரியா ஓ மரியா…
ப்ரூட் செரியா நீ வரியா…
ஈ.மெயிலில் லவ் லெட்டர் தரியா…

ஆண் : கடலுக்கு பிஷ்ஷிங்நெட்டு…
காதலுக்கு இன்டர்நெட்டு…
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை…

BGM

பெண் : ல ல ல ல ல ல… ல ல ல ல லா…

ஆண் : கட்டழகுக்கொரு பட்டியலிட்டு…
காட்டுது இன்டர்நெட்டு…
மனச விட்டு மௌஸ்ச தட்டு…
மாட்டிடும் பதினெட்டு…

ஆண் : இறக்கை எதற்கு பறந்தோடலாம்…
இருக்கும் இடத்தை மறந்தாடலாம்…
இறக்கை எதற்கு பறந்தோடலாம்…
இருக்கும் இடத்தை மறந்தாடலாம்…

ஆண் : ஓ மரியா ஓ மரியா…
ஓ மரியா ஓ மரியா…
ப்ரூட் செரியா நீ வரியா…
ஈ.மெயிலில் லவ் லெட்டர் தரியா…

ஆண் : கடலுக்கு பிஷ்ஷிங் நெட்டு…
காதலுக்கு இன்டர்நெட்டு…
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை…

ஆண் : ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா…
ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா…

BGM

ஆண் : மரியா மரியா மரியா மரியா மா மோ…
மரியா மரியா மரியா மரியா மா மோ…
மரியா மரியா மரியா மரியா மா மோ…
மரியா மரியா மரியா மரியா மா மோ…


Notes : O Maria Song Lyrics in Tamil. This Song from Kadhalar Dhinam (1999). Song Lyrics penned by Vaali. ஓ மரியா ஓ மரியா பாடல் வரிகள்.


தாண்டியா ஆட்டமுமாட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகவிதா கிருஷ்ணமூர்த்தி, உன்னி மேனன் & எம்.ஜி. ஸ்ரீகுமார்ஏ.ஆர்.ரகுமான்காதலர் தினம்

Dhaandiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட…
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட…
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக…
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு…
அவள் எங்கே என காணாமல் வாட…
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ…

ஆண் : தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட…
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட…

BGM

ஆண் : உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல…
ஊமையாகி நின்றதென்ன சொல்ல…
நூறு வார்த்தை அல்ல அல்ல…
ஒரு வார்த்தை புரியாதா…

பெண் : எந்த வார்த்தை சொல்லவில்லையோ நீ…
அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான்…
நூறு ஜாடையில் சொன்னேனே…
தெரியாதா புரியாதா…

ஆண் : ஓஓ… மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும்…
மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும்…
பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேர வேண்டும்…

பெண் : ஓ… கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும்…
கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்…

ஆண் : சிறு காதல் நெஞ்சை நான் தரலாமா…
உன் கணவனாக நான் வரலாமா…

பெண் : இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்…
ஒரு ஜென்மம் போதும்…

ஆண் : உயிரே வா…
பெண் : அன்பே வா…

ஆண் : உயிரே வா…
பெண் : அன்பே வா…

ஆண் : தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட…
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட…
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக…
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு…
அவள் எங்கே என காணாமல் வாட…
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ…

BGM

பெண் : காதல் பார்வைகள் எல்லாமே அழகு…
காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை…
காதல் செய்வதே எந்நாளும் தெய்வீகம் தெய்வீகம்…

ஆண் : காதல் என்பதைக் கண்டு பிடித்தவன்…
காலம் முழுவதும் நன்றிக்குரியவன்…
காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்…

பெண் : ஓஹோ… உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்…
தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்…

ஆண் : ஓஹோ… என்னைப் பற்றி நீதான் எண்ணியது தவறு…
என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு…

பெண் : இரு உயிர்கள் என்பதே கிடையாது…
இதில் உனது எனது எனப் பிரிவேது…

ஆண் : இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்…
ஒரு ஜென்மம் போதும்…

பெண் : உயிரே வா…
ஆண் : அன்பே வா…

பெண் : உயிரே வா…
ஆண் : அன்பே வா…

ஆண் : வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட…
வந்தது இங்கொரு ராத்திரி…
தாண்டியா என்றொரு ராத்திரி…

ஆண் : வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட…
வந்தது இங்கொரு ராத்திரி…
தாண்டியா என்றொரு ராத்திரி…

ஆண் & பெண் : துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே…
துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…

BGM

ஆண் & பெண் : உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…

BGM

ஆண் & பெண் : உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…

BGM


Notes : Dhaandiya Song Lyrics in Tamil. This Song from Kadhalar Dhinam (1999). Song Lyrics penned by Vaali. தாண்டியா ஆட்டமுமாட பாடல் வரிகள்.


roja-roja-song-lyrics

ரோஜா ரோஜா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன்ஏ.ஆர்.ரகுமான்காதலர் தினம்

Roja Roja Song Lyrics in Tamil


ஆண் : ரோஜா… ரோஜா…

ஆண் : ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…

ஆண் : கண்ட பின்னே உன்னிடத்தில்…
என்னைவிட்டு வீடுவந்தேன்…
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்…
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்…
உனை வேறு கைகளில் தரமாட்டேன்…
நான் தரமாட்டேன்…
நான் தரமாட்டேன்…
ரோஜா… ரோஜா… ரோஜா… ரோஜா…

BGM

ஆண் : நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்…
நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன்…
உடையென எடுத்து எனை உடுத்து…
நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா…

ஆண் : உன் பேர் மெல்ல நான் சொன்னதும்…
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன…
ஓர் நாள் உன்னைக் காணாவிடில்…
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன…
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே…

ஆண் : மழையில் நீ நனைகையில்…
எனக்குக் காய்ச்சல் வரும்…
வெயிலில் நீ நடக்கையில்…
எனக்கு வேர்வை வரும்…
உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று…
ரோஜா… ரோஜா… ரோஜா…

ஆண் : ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
கண்ட பின்னே உன்னிடத்தில்…
என்னைவிட்டு வீடுவந்தேன்…

BGM

ஆண் : இளையவளின் இடையொரு நூலகம்…
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்…
இடைவெளி எதற்கு சொல் நமக்கு…
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன…

ஆண் : என்னைத் தீண்டக் கூடாதென…
வானோடு சொல்லாது வங்கக்கடல்…
என்னை ஏந்தக் கூடாதென…
கையோடு சொல்லாது புல்லாங்குழல்…
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே…

ஆண் : விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே…
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே…
உனைவிட வேறு நினைவுகள் ஏது…
ரோஜா… ரோஜா… ரோஜா…

ஆண் : ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
கண்ட பின்னே உன்னிடத்தில்…
என்னைவிட்டு வீடுவந்தேன்…

ஆண் : ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா… ரோஜா…

BGM


Notes : Roja Roja Song Lyrics in Tamil. This Song from Kadhalar Dhinam (1999). Song Lyrics penned by Vaali. ரோஜா ரோஜா பாடல் வரிகள்.