Category Archives: பெரிய குடும்பம்

பெரிய குடும்பம் – Periya Kudumbam (1995)

முச்சத்து மாடப்புறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்மனோ & கே. எஸ். சித்ராஇளையராஜாபெரிய குடும்பம்

Muchathu Maadapura Song Lyrics in Tamil


BGM

பெண் : முச்சத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
முச்சத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…

பெண் : சொக்குற எம் மனச மாமனுக்கு காதுல ஓதிடுமா…
முத்த மழையினில் ஆடை கட்ட…
முந்திரித் தோப்பினில் வேலி கட்ட…
தாமதம் ஏன் என்று கேளடி தாலி கட்ட… ஓ…

ஆண் : முற்றத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
சொக்குற எம் மனச…
சுந்தரிக்கு காதுல ஓதிடுமா…

BGM

குழு : தந்ததத் தம்தம் தந்ததத் தம்தம்…
தந்ததத் தம்தம் தந்ததத் தம்…
தந்ததத் தம்தம் தந்ததத் தம்தம்…
தந்ததத் தம்தம் தந்ததத் தம்…

BGM

பெண் : கட்டளைக்கு தினம் கட்டுப்படுகிற கட்டழகி எனக்கு…
உன் கட்டுக் கதை எதற்கு… ஓஹொ…

BGM

பெண் : தொட்டுத் தழுவிட சுற்றி வருகிற கட்டிக் கரும்புனக்கு…
வீண் அச்சம் இனி எதற்கு…

ஆண் : நீருக்கும் வேருக்கும் பேதம் இல்லை…
வேறெதும் நான் பேச வார்த்தை இல்லை…

பெண் : ஆருயிர் காவலனே உன் காவல் தேடித்தான்…
தேயுது வான் பிறையே…

ஆண் : ஆடிடும் காவிரியே நீ வந்து கூடத்தான்…
பாடுது வாலிபமே…

பெண் : வா வாடிடுதே வாச முல்லை…
நீ தொடத் தாமதம் ஏன்…

ஆண் : ஓ… முற்றத்து மாடப் புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
சொக்குற எம் மனச…
சுந்தரிக்கு காதுல ஓதிடுமா…

BGM

ஆண் : வெட்கம் வருகையில் பத்து நிலவென…
வட்ட முகம் சிவக்க அந்த வெட்டி நிலவெதற்கு…

BGM

ஆண் : முத்தக் கடலுக்குள் முத்துக் குளித்திட திட்டம் இட்ட பிறகு…
வீண் வெட்டிக் கதை எதற்கு…

பெண் : ராமனும் சீதைக்கு மாலை இட…
மந்திரம் சொல்லிடும் வேளை எது…

ஆண் : கேளடி தாமரையே உன் நாணம் காணத்தான்…
வாழ்ந்திடும் சூரியனே…

பெண் : ஆனந்த சூரியனே உன்னோடு சேரத்தான்…
பூத்திடும் தாமரையே…

ஆண் : நான் என்னை இங்கே தந்துவிட்டேன்…
நம்புடி சுந்தரியே…

பெண் : முச்சத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
சொக்குற எம் மனச…
மாமனுக்கு காதுல ஓதிடுமா…

ஆண் : முத்த மழையினில் ஆடை கட்ட…
முந்திரித் தோப்பினில் வேலி கட்ட…
நித்தம் தவிக்கிற சிட்டுக்குத் தாலி கட்ட… ஓ…

பெண் : முச்சத்து மாடப் புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…

ஆண் : சொக்குற எம் மனச…
சுந்தரிக்கு காதுல ஓதிடுமா…


Notes : Muchathu Maadapura Song Lyrics in Tamil. This Song from Periya Kudumbam (1995). Song Lyrics penned by R.V. UdhayaKumar. முச்சத்து மாடப்புறா பாடல் வரிகள்.


ரத்தத்தப் பங்கு வச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழிஇளையராஜாபெரிய குடும்பம்

Rathatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…

ஆண் : சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

ஆண் : நேத்து வர ஒத்துமையா…
வாழ்ந்திருந்த சொந்தமடா…
யாரு கண்ணு பட்டதுவோ…
ஊரு கூட சொல்லுதடா…

ஆண் : விதியா தட்டுக் கெட்ட மதியா…
வினையா மத்தவங்க சதியா…

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

BGM

ஆண் : அம்மா மண்ணில் சாய்ந்ததம்மா…
வாழ வெச்ச வாழ மரம்…
சொன்னா சொல்லு தாங்கிடுமா…
ரோசம் உள்ள தாயின் மனம்…

ஆண் : பிள்ளைகள் பெத்தா நெல் மணிக் கொத்தா…
பெத்ததில் என்ன புண்ணியம் கண்டா…

ஆண் : பந்தமும் பாசமும் என்னாச்சு…
பெத்தவ சந்தியில் நின்னாச்சு…
பாடுகள் ஆயிரம் பட்டாச்சு…
பேச்சையும் மூச்சையும் விட்டாச்சு…

ஆண் : அம்மான்னு அம்மான்னு…
சொன்னது எல்லாம் சும்மாவா…

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

BGM

ஆண் : பெத்தா இவ மூணு புள்ள…
ஒண்ணுக்கொண்ணு சேரவில்ல…
ஒண்ணா இப்ப சேந்திருக்கு…
பெத்தவள தூக்கயிலே…

ஆண் : தள்ளியே வச்சு வெந்தது பாதி…
கொள்ளியே வச்சு வேகணும் மீதி…

ஆண் : தொட்டிலில் போட்டவ தாலாட்டி…
தோள்களில் வைத்தவ சீராட்டி…
ஒவ்வொரு வேளையும் சோறூட்டி…
உங்கள தாங்கிய மூதாட்டி…
புண்ணான நெஞ்சோடு பூமியவிட்டு போறாளே…

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…


Notes : Rathatha Song Lyrics in Tamil. This Song from Periya Kudumbam (1995). Song Lyrics penned by Vaali. ரத்தத்தப் பங்கு வச்சு பாடல் வரிகள்.