Category Archives: ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி – Oru Oorla Oru Rajakumari (1995)

அழகு நிலா காயும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

Azhagu Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அமைதியான நேரம் ஊர் உறங்கும் வேளை…
சிலு சிலுணு காத்து தாலாட்டுற வேளை…
சிரிக்குது என்ன பார்த்து தங்கமணி மால…

ஆண் : கண்ணான கண்ணுமணி கண்ணு உறங்கு…
பொன்னான காலம் ஒன்னு காத்து கெடக்கு…

ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அழகு நிலா காயும்… ம்ம்ம்ம்…

BGM

ஆண் : ராப்பொழுது எப்பவும் இல்ல…
அதுக்கும் உள்ளது எல்லை…
வேளை வந்தா விடிஞ்சாகனும்…
பகல் வேளை வந்தால் விடுஞ்சாகனும்…

ஆண் : காயாத வெள்ளமும் இல்ல…
அதுக்கும் உள்ளது எல்லை…
கோடை வந்தா வடிஞ்சாகணும்… ம்ம்…
இங்கு கோடை வந்தா வடிஞ்சாகணும்… ம்ம்…

ஆண் : எந்நாளும் எதிர்நீச்சல் நீ போடணும்…
எதிர்காலம் நமக்கென்று நீ பாடணும்…
பொன்மானே கொல்லிமலை பூந்தேனே…
உன் கண்ணீர் எல்லாம் பன்னீர் ஆகுமே… ஏஏ…

ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அமைதியான நேரம் ஊர் உறங்கும் வேளை…
சிரிக்குது என்ன பார்த்து தங்கமணி மால…

BGM

ஆண் : வேர் வாழ ஊத்தணும் நீறு…
மரத்த வச்சவன் யாரு…
வாடாமலே அவன் பார்த்துப்பான்… ஆஆ…
வேர் வாடாமலே அவன் பார்த்துப்பான்… ஆஆ…

ஆண் : யாரால மண்ணுல வந்தோம்…
பொறந்து கண்ணு தொறந்தோம்…
பாரம் எல்லாம் அவன் ஏத்துப்பான்… ஆஆ…
நம்ம பாரம் எல்லாம் அவன் ஏத்துப்பான்… ஆஆ…

ஆண் : அவன் சொல்லி யாராச்சும் வரக்கூடுமே…
நாம் வேண்டும் நிழல் கூட தரக்கூடுமே…
என்னைப்போலே நம்பி இரு இனிமேலே… ஏ…
உன் துன்பம் எல்லாம் தூளாய் போகுமே…

BGM

ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அமைதியான நேரம் ஊர் உறங்கும் வேளை…
சிலுசிலுணு காத்து தாலாட்டுற வேளே…
சிரிக்குது என்ன பார்த்து தங்கமணி மால…

ஆண் : கண்ணான கண்ணுமணி கண்ணு உறங்கு…
பொன்னான காலம் ஒன்னு காத்து கெடக்கு…

ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அழகு நிலா காயும்…


Notes : Azhagu Nila Song Lyrics in Tamil. This Song from Oru Oorla Oru Rajakumari (1995). Song Lyrics penned by Vaali. அழகு நிலா காயும் பாடல் வரிகள்.


கண்மணி காதல் வாழ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாஇளையராஜாஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

Kanmani Kadhal Vazha Song Lyrics in Tamil


ஆண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…

BGM

ஆண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…

ஆண் : இந்த மௌன நாடகம்…
மெல்ல களைந்து போகவே…
நிலவே ஒரு தூதாக நீ சென்று வா…

பெண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…

பெண் : மாடம் பொன் மாடம் என்றாலும்…
மன்னன் இல்லாமல் நான் வாழ்வதா…

BGM

ஆண் : கண்ணில் உலாவும் நிலாவே…
கையில் வராமல் நீ போவதா…

பெண் : காதல் தோற்றால் கண்கள் தூங்குமா…
நேசம் பொய்த்தால் நெஞ்சம் தாங்குமா…

ஆண் : அலை பாயும் நெஞ்சம்…
இனி உந்தன் தஞ்சம்…

பெண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…

BGM

ஆண் : பூவே செம்பூவே உன் பேரை…
தென்றல் சொல்லாத நாள் ஏதம்மா…

BGM

பெண் : பொன்னே செம்பொன்னே உன் மாலை…
தோள்கள் கொண்டாடும் நாள் கூடுமோ…

ஆண் : ராஜ வம்சம் எனை ஏற்குமா…
ஏழை என்றே எனை பார்க்குமா…

பெண் : அலை பாயும் நெஞ்சம்…
இனி உந்தன் தஞ்சம்…

ஆண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…

பெண் : இந்த மௌன நாடகம்
மெல்ல களைந்து போகவே…
நிலவே ஒரு தூதாக நீ சென்று வா…

ஆண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
பெண் : கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…


Notes : Kanmani Kadhal Vazha Song Lyrics in Tamil. This Song from Oru Oorla Oru Rajakumari (1995). Song Lyrics penned by Vaali. கண்மணி காதல் வாழ பாடல் வரிகள்.


வந்தாள் வந்தாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ, அருண்மொழி & தேவி நீத்தியார்இளையராஜாஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

Vandhal Vandhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…

ஆண் : மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்…
கங்கனம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்…
சங்கம பெருநாளாம்… ஹோய்…
சங்கம பெருநாளாம் ஹோய்…

பெண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…

பெண் : மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்…
கங்கனம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்…
சங்கம பெருநாளாம்… ஹோய்…
சங்கம பெருநாளாம்… ஹோய்…

BGM

ஆண் : எங்கேயோ ஒரு ஏழைமகன்…
என்றே நான் அன்று வாழந்திருந்தேன்…
இந்நாளில் ஒரு தேவதையின்…
பொன்மார்பில் வந்து நான் விழுந்தேன்…

பெண் : பொன்வேய்ந்த மணி மாடத்திலே…
மஞ்சள் நான் விரிப்பேன் அதில் பூ விரிப்பேன்…
கண்ணோரம் உயிர் காதல் எனும்…
கதை நான் படிப்பேன் உன்னைச் சேர்ந்திருப்பேன்…

ஆண் : செந்தேன் செந்தேன் தேன் முத்தம் என்று…
தந்தாள் தந்தாள் நான் கொஞ்ச இன்று…

ஆண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
பெண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…

ஆண் : மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்…
பெண் : கங்கனம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்…

ஆண் : சங்கம பெருநாளாம்… ஹோய்…
பெண் : சங்கம பெருநாளாம்… ஹோய்…

BGM

பெண் : எப்போதும் எந்தன் ராஜ சபை…
கொண்டாடும் இங்கு உன் வரவை…
முப்போதும் மன வீணை தந்தே…
பண்பாடும் இங்கு உன் புகழை…

ஆண் : பல்லாக்கும் சிறுபூந்தேரும்…
என எல்லாமும் இங்கு காத்திருந்தும்…
உன் தோளில் மெல்லச் சாய்ந்திருக்க…
இங்கு உண்டாகும் ஒரு கோடி இன்பம்…

பெண் : முன்னாள் செய்த புண்ணியம் எல்லாம்…
உன்னால் கொண்டேன் என் மணிவண்ணா…

பெண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
ஆண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…

பெண் : மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்…
ஆண் : கங்கனம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்…

பெண் : சங்கம பெருநாளாம்… ஹோய்…
ஆண் : சங்கம பெருநாளாம்… ஹோய்…

பெண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
ஆண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…


Notes : Vandhal Vandhal Song Lyrics in Tamil. This Song from Oru Oorla Oru Rajakumari (1995). Song Lyrics penned by Vaali. வந்தாள் வந்தாள் பாடல் வரிகள்.