பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | மனோ | இளையராஜா | ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி |
Azhagu Nila Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அமைதியான நேரம் ஊர் உறங்கும் வேளை…
சிலு சிலுணு காத்து தாலாட்டுற வேளை…
சிரிக்குது என்ன பார்த்து தங்கமணி மால…
ஆண் : கண்ணான கண்ணுமணி கண்ணு உறங்கு…
பொன்னான காலம் ஒன்னு காத்து கெடக்கு…
ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அழகு நிலா காயும்… ம்ம்ம்ம்…
—BGM—
ஆண் : ராப்பொழுது எப்பவும் இல்ல…
அதுக்கும் உள்ளது எல்லை…
வேளை வந்தா விடிஞ்சாகனும்…
பகல் வேளை வந்தால் விடுஞ்சாகனும்…
ஆண் : காயாத வெள்ளமும் இல்ல…
அதுக்கும் உள்ளது எல்லை…
கோடை வந்தா வடிஞ்சாகணும்… ம்ம்…
இங்கு கோடை வந்தா வடிஞ்சாகணும்… ம்ம்…
ஆண் : எந்நாளும் எதிர்நீச்சல் நீ போடணும்…
எதிர்காலம் நமக்கென்று நீ பாடணும்…
பொன்மானே கொல்லிமலை பூந்தேனே…
உன் கண்ணீர் எல்லாம் பன்னீர் ஆகுமே… ஏஏ…
ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அமைதியான நேரம் ஊர் உறங்கும் வேளை…
சிரிக்குது என்ன பார்த்து தங்கமணி மால…
—BGM—
ஆண் : வேர் வாழ ஊத்தணும் நீறு…
மரத்த வச்சவன் யாரு…
வாடாமலே அவன் பார்த்துப்பான்… ஆஆ…
வேர் வாடாமலே அவன் பார்த்துப்பான்… ஆஆ…
ஆண் : யாரால மண்ணுல வந்தோம்…
பொறந்து கண்ணு தொறந்தோம்…
பாரம் எல்லாம் அவன் ஏத்துப்பான்… ஆஆ…
நம்ம பாரம் எல்லாம் அவன் ஏத்துப்பான்… ஆஆ…
ஆண் : அவன் சொல்லி யாராச்சும் வரக்கூடுமே…
நாம் வேண்டும் நிழல் கூட தரக்கூடுமே…
என்னைப்போலே நம்பி இரு இனிமேலே… ஏ…
உன் துன்பம் எல்லாம் தூளாய் போகுமே…
—BGM—
ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அமைதியான நேரம் ஊர் உறங்கும் வேளை…
சிலுசிலுணு காத்து தாலாட்டுற வேளே…
சிரிக்குது என்ன பார்த்து தங்கமணி மால…
ஆண் : கண்ணான கண்ணுமணி கண்ணு உறங்கு…
பொன்னான காலம் ஒன்னு காத்து கெடக்கு…
ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அழகு நிலா காயும்…
Notes : Azhagu Nila Song Lyrics in Tamil. This Song from Oru Oorla Oru Rajakumari (1995). Song Lyrics penned by Vaali. அழகு நிலா காயும் பாடல் வரிகள்.