கண்மணி காதல் வாழ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாஇளையராஜாஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

Kanmani Kadhal Vazha Song Lyrics in Tamil


ஆண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…

BGM

ஆண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…

ஆண் : இந்த மௌன நாடகம்…
மெல்ல களைந்து போகவே…
நிலவே ஒரு தூதாக நீ சென்று வா…

பெண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…

பெண் : மாடம் பொன் மாடம் என்றாலும்…
மன்னன் இல்லாமல் நான் வாழ்வதா…

BGM

ஆண் : கண்ணில் உலாவும் நிலாவே…
கையில் வராமல் நீ போவதா…

பெண் : காதல் தோற்றால் கண்கள் தூங்குமா…
நேசம் பொய்த்தால் நெஞ்சம் தாங்குமா…

ஆண் : அலை பாயும் நெஞ்சம்…
இனி உந்தன் தஞ்சம்…

பெண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…

BGM

ஆண் : பூவே செம்பூவே உன் பேரை…
தென்றல் சொல்லாத நாள் ஏதம்மா…

BGM

பெண் : பொன்னே செம்பொன்னே உன் மாலை…
தோள்கள் கொண்டாடும் நாள் கூடுமோ…

ஆண் : ராஜ வம்சம் எனை ஏற்குமா…
ஏழை என்றே எனை பார்க்குமா…

பெண் : அலை பாயும் நெஞ்சம்…
இனி உந்தன் தஞ்சம்…

ஆண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…

பெண் : இந்த மௌன நாடகம்
மெல்ல களைந்து போகவே…
நிலவே ஒரு தூதாக நீ சென்று வா…

ஆண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
பெண் : கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…


Notes : Kanmani Kadhal Vazha Song Lyrics in Tamil. This Song from Oru Oorla Oru Rajakumari (1995). Song Lyrics penned by Vaali. கண்மணி காதல் வாழ பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top