Category Archives: சிந்துநதி பூ

சிந்துநதி பூ – Sindhu Nathi Poo (1994)

மத்தாளம் கொட்டுதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம், சுவர்ணலதா & லூஸ் மோகன்சௌந்தர்யன்சிந்துநதி பூ

Mathalam Kottudhadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொண்டுகளா பொண்டுகளா பொத்திகிட்டு கெடங்க…
பசுபதி ஓடி வர்றான் பத்திரமா இருங்க…
பொம்பளைங்கனா இவனுக்கு புத்திக்குள்ள கிறுக்கு…
கைய கால தொட்டு வைப்பான் காலம் கெட்டுகெடக்கு…
உஷாரு உஷாரு உஷாரு…

BGM

பெண் : மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…
மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…

பெண் : காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு…
கட்டுத் தறியா அது ஏது நமக்கு…
காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு…
கட்டுத் தறியா அது ஏது நமக்கு…

ஆண் : மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…
மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…

BGM

ஆண் : சின்ன மாங்கா அது திறந்திருக்கு…
திருடி தின்ன அதில் ருசி இருக்கு…

BGM

பெண் : ஆமா ஆமா ஆமாமா…
அட ஆமா ஆமா ஆமாமா…

ஆண் : பட்டு பூச்சி பல ரகம் இருக்கு…
புடிச்சுப்புட்டா தனி சுகமிருக்கு…

பெண் : ஆமா ஆமா ஆமாமா…
அட ஆமா ஆமா ஆமாமா…

ஆண் : கம்மாயோ நெறஞ்சிருக்கு…
காக்கா நீச்சல் அடிப்போமா…
எருமையெல்லாம் படகாக…
எதிர் கரைக்கு போவோமா…

பெண் : கிழக்க போற ரயிலேறி…
கீழக் கரையில் குதிப்போமா…
கெழடு கட்ட செவப்புக் கொடி…
காட்ட வந்த ஒதைப்போமா…

பெண் : மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…

BGM

ஆண் : பூவரச இலையிலே பீபீ செஞ்சு…
புது ராகம் ஒண்ணு படிக்கட்டுமா…

BGM

ஆண் : அய்யனாரு வெள்ளக் குதிரையிலே…
ஐயாவும் கொஞ்சம் ஏறட்டுமா…

பெண் : குதிர வால புடிச்சிக்கிட்டு…
உன் கூட நானும் வரலாமா…

ஆண் : வெள்ளாட்டு பால் பீச்சி…
கண்ணுக்குள்ள விடலாமா…
புதுப்பட்டி ரோட்டோரம்…
புளியங்கா அடிப்போமா…

பெண் : இந்த வயசு மாறாம…
இருக்கும் வரைக்கும் இருப்போமா…

ஆண் : பொட்டு தவிடு பருத்தி கொட்ட…
சிட்டா வானில் பறப்போமா…

பெண் : மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…

ஆண் : மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…

பெண் : காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு…
கட்டுத் தறியா அது ஏது நமக்கு…

ஆண் : காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு…
கட்டுத் தறியா அது ஏது நமக்கு…

ஆண் & பெண் : மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…
மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…


Notes : Mathalam Kottudhadi Song Lyrics in Tamil. This Song from Sindhu Nathi Poo (1994). Song Lyrics penned by Vairamuthu. மத்தாளம் கொட்டுதடி பாடல் வரிகள்.


ஆத்தாடி என்ன உடம்பு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாகுல் ஹமீதுசௌந்தர்யன்சிந்துநதி பூ

Aathadi Enna Odambu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு…
அடி அங்கங்கே பச்ச நரம்பு…
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு…
அதில் அடையாளம் சின்ன தழும்பு…

ஆண் : பூவாழ காலாக பொன்மூங்கில் தோளாக…
குழு : பூவாழ காலாக பொன்மூங்கில் தோளாக…

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு…
அடி அங்கங்கே பச்ச நரம்பு…
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு…
அதில் அடையாளம் சின்ன தழும்பு…

BGM

ஆண் : நட்சத்திரம் நட்சத்திரம் நட்டு வச்ச கண்ணு…
உன் கண்ணு என் கண்ணு…
முத்துச்சரம் முத்துச்சரம் கொட்டி வச்ச பல்லு…
நில்லு பதில் சொல்லு…

ஆண் : கோலாரு தங்கம் எல்லாம்…
உன் கன்னத்தில் ஒட்டிக்கிச்சா…
பாலாறு மொத்தம் வந்து…
உன் பருவத்தில் கொட்டிக்கிச்சா…

ஆண் : இப்போது பாவாடை எப்போது மேலாடை…
இப்போது பாவாடை எப்போது மேலாடை…

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு…
அடி அங்கங்கே பச்ச நரம்பு…
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு…
அதில் அடையாளம் சின்ன தழும்பு…

BGM

ஆண் : தோழுமேல தூக்கிகிட்டு ஏழு லோகம் சுத்த…
நான் சுத்த நீ கத்த…
மைனாவுக்கு தூக்கம் வந்தா மாமன் மடி மெத்த…
பொன் மெத்த பூ மெத்த…

ஆண் : செம்பட்டி வெள்ளரிக்கா போல…
சிறியேண்டி செல்ல கண்ணே…
நிலக்கோட்டை பூவெடுத்து நான் ஜடை போட்டு…
பார்ப்பேன் பொண்ணே…

ஆண் : செவ்வாழைத் தண்டாக சிறு முல்லை செண்டாக…
குழு : செவ்வாழைத் தண்டாக சிறு முல்லை செண்டாக…

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு…
அடி அங்கங்கே பச்ச நரம்பு…
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு…
அதில் அடையாளம் சின்ன தழும்பு…

ஆண் : பூவாழ காலாக பொன்மூங்கில் தோளாக…
குழு : பூவாழ காலாக பொன்மூங்கில் தோளாக…

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு…
அடி அங்கங்கே பச்ச நரம்பு…
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு…
அதில் அடையாளம் சின்ன தழும்பு…


Notes : Aathadi Enna Odambu Song Lyrics in Tamil. This Song from Sindhu Nathi Poo (1994). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தாடி என்ன உடம்பு பாடல் வரிகள்.


அடியே அடி சின்னப்புள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசௌந்தர்யன்சிந்துநதி பூ

Adiye Adi Chinnapulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…

BGM

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…
மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல…

பெண் : அடடா அட சின்ன கண்ணா…
இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா…
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா…

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…

BGM

ஆண் : கன்னத்தை மெல்லமாய் தட்டுவேன்…
உன் காதிலே தேன் துளி சொட்டுவேன்…

பெண் : உன்னை நான் செல்லமாய் திட்டுவேன்…
என் ஊடலை தீர்த்து வை ஒட்டுவேன்…

ஆண் : கட்டிலில் ரெண்டு ஜீவன்கள் துடித்தால் என்ன…
கடலே உன்னை சூரியன் குடித்தால் என்ன…

பெண் : வாலிபம் தந்து நீ உருகினாய்…
என் வாய் வழி ஜீவனை பருகினாய்…

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…

BGM

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…
மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல…

பெண் : அடடா அட சின்ன கண்ணா…
இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா…
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா…

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…

BGM

பெண் : கதவினை மெல்லவே மூடினாய்…
நீ கஞ்சன்போல் புதையலை தேடினாய்…

ஆண் : புதையலை புடவையால் மூடினாய்…
நான் பூனைப்போல் தோண்டினேன் ஓடினாய்…

பெண் : மன்மதா உன் மேகங்கள் பொழிந்தால் என்ன…
ஆண் : ஆஹான்…
பெண் : மழையில் இந்த பூமியே நனைந்தாலென்ன…

ஆண் : தேவைகள் தினம் தினம் நீளட்டும்…
என் தேவதை என்னையும் ஆளட்டும்…

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…

BGM

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…
மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல…

பெண் : அடடா அட சின்ன கண்ணா…
இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா…
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா…

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…


Notes : Adiye Adi Chinnapulla Song Lyrics in Tamil. This Song from Sindhu Nathi Poo (1994). Song Lyrics penned by Vairamuthu. அடியே அடி சின்னப்புள்ள பாடல் வரிகள்.


கடவுளும் நீயும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன் & எஸ்.ஜானகிசௌந்தர்யன்சிந்துநதி பூ

Kadavullum Neeyam Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம்தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…

ஆண் : நதியென்றால் நுரை உண்டு…
வாழ்வென்றால் குறை உண்டு…

பெண் : ஐப்பசி வந்தால் அடைமழை காலம்…
சிலர் ஆயுள் முழுதும் ஐப்பசி மாதம்…

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம் தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…

BGM

ஆண் : அன்றொரு நாள் சின்னப்பிள்ளையிலே…
உன் தாய் எரிந்தாள் சொந்தக் கொள்ளியிலே…
வெந்துவிட்டாய் சின்னப் பிஞ்சினிலே…
பட்ட வடு இன்னும் நெஞ்சினிலே…

ஆண் : தாய்மை இல்லாமல் யாரும் இங்கில்லை…
கர்ப்பம் இல்லாமல் கடவுள் இங்கில்லை…
தாய்ப்பாலை போல தீர்த்தம் வேறில்லை…
அவள் வாய் சொல்லை போல வேதம் வேறில்லை…

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம்தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…

ஆண் : நதியென்றால் நுரை உண்டு…
வாழ்வென்றால் குறை உண்டு…

BGM

ஆண் : தீயிருந்தால் அங்கே புகையிருக்கும்…
உறவிருந்தால் கொஞ்சம் பகையிருக்கும்…
கடலிருந்தால் எங்கோ கரையிருக்கும்…
கதையிருந்தால் ஏதோ முடிவிருக்கும்…

ஆண் : வாழ்வும் வாராமல் சாவும் நேராமல்…
ரெண்டும் இல்லாமல் மண்ணில் வாழ்கின்றாய்…
பெண்மை கண்டாலே தாய்மை காண்கின்றாய்…
பலர் பூஜை கொண்டாடும் பூவாய் வாழ்கின்றாய்…

பெண் : அன்புள்ள மகனே அழுதது போதும்…
புன்னகை சிந்து இனி பூக்களின் மாதம்…

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம்தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…

ஆண் : நதியென்றால் நுரை உண்டு…
வாழ்வென்றால் குறை உண்டு…


Notes : Kadavullum Neeyam Song Lyrics in Tamil. This Song from Sindhu Nathi Poo (1994). Song Lyrics penned by Vairamuthu. கடவுளும் நீயும் பாடல் வரிகள்.