பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | உன்னி மேனன் & எஸ்.ஜானகி | சௌந்தர்யன் | சிந்துநதி பூ |
Kadavullum Neeyam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம்தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…
ஆண் : நதியென்றால் நுரை உண்டு…
வாழ்வென்றால் குறை உண்டு…
பெண் : ஐப்பசி வந்தால் அடைமழை காலம்…
சிலர் ஆயுள் முழுதும் ஐப்பசி மாதம்…
ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம் தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…
—BGM—
ஆண் : அன்றொரு நாள் சின்னப்பிள்ளையிலே…
உன் தாய் எரிந்தாள் சொந்தக் கொள்ளியிலே…
வெந்துவிட்டாய் சின்னப் பிஞ்சினிலே…
பட்ட வடு இன்னும் நெஞ்சினிலே…
ஆண் : தாய்மை இல்லாமல் யாரும் இங்கில்லை…
கர்ப்பம் இல்லாமல் கடவுள் இங்கில்லை…
தாய்ப்பாலை போல தீர்த்தம் வேறில்லை…
அவள் வாய் சொல்லை போல வேதம் வேறில்லை…
ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம்தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…
ஆண் : நதியென்றால் நுரை உண்டு…
வாழ்வென்றால் குறை உண்டு…
—BGM—
ஆண் : தீயிருந்தால் அங்கே புகையிருக்கும்…
உறவிருந்தால் கொஞ்சம் பகையிருக்கும்…
கடலிருந்தால் எங்கோ கரையிருக்கும்…
கதையிருந்தால் ஏதோ முடிவிருக்கும்…
ஆண் : வாழ்வும் வாராமல் சாவும் நேராமல்…
ரெண்டும் இல்லாமல் மண்ணில் வாழ்கின்றாய்…
பெண்மை கண்டாலே தாய்மை காண்கின்றாய்…
பலர் பூஜை கொண்டாடும் பூவாய் வாழ்கின்றாய்…
பெண் : அன்புள்ள மகனே அழுதது போதும்…
புன்னகை சிந்து இனி பூக்களின் மாதம்…
ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம்தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…
ஆண் : நதியென்றால் நுரை உண்டு…
வாழ்வென்றால் குறை உண்டு…
Notes : Kadavullum Neeyam Song Lyrics in Tamil. This Song from Sindhu Nathi Poo (1994). Song Lyrics penned by Vairamuthu. கடவுளும் நீயும் பாடல் வரிகள்.