Category Archives: உறவை காத்த கிளி

உறவை காத்த கிளி – Uravai Kaatha Kili (1984)

புள்ளைங்க பேருலதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்பி. சுசீலாடி. ராஜேந்தர்உறவை காத்த கிளி

Pullainga Perulathaan Song Lyrics in Tamil


BGM

பெண் : புள்ளைங்க பேருலதான் தங்கம் வைரம் இருக்குது…
கூழு கூட கிடைக்காம எங்க வயிறு தவிக்குது…
புள்ளைங்க பேருலதான் தங்கம் வைரம் இருக்குது…
கூழு கூட கிடைக்காம எங்க வயிறு தவிக்குது…

பெண் : அடுப்பது எரியவில்ல…
ஜாண் வயிறு எரியுதம்மா…
அடுப்பது எரியவில்ல…
ஜாண் வயிறு எரியுதம்மா…

பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா என்னை…
பிஞ்சு முகங்கள் பாத்தாக்க அழுவேனே மெல்ல… ஆஆ…

BGM

பெண் : வானமென்னும் தட்டு நிறைய…
நட்சத்திர சோற்றுப் பருக்கை…
வானமென்னும் தட்டு நிறைய…
நட்சத்திர சோற்றுப் பருக்கை…

பெண் : அங்கும் இங்கும் கொட்டி கிடக்க…
அம்மம்மா எங்க பொறுக்க…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்க…
அம்மம்மா எங்க பொறுக்க…

பெண் : நிலவினை பார்ப்பதற்கு மாம்பழம் போல் இருக்குது…
பசியிலே பறிப்பதற்கு எட்டாமல் ஏய்க்கிறது…

பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா என்னை…
பிஞ்சு முகங்கள் பாத்தாக்க அழுவேனே மெல்ல… ஆஆ… ஆஆ…

BGM

பெண் : மண்ணை படைக்கையிலே…
மேடென்றும் பள்ளமென்றும்…
மண்ணை படைக்கையிலே…
மேடென்றும் பள்ளமென்றும்…

பெண் : பிரித்திட்ட ஆண்டவனே…
உன்னை நான் கேட்கின்றேன்…
பிரித்திட்ட ஆண்டவனே…
உன்னை நான் கேட்கின்றேன்…

பெண் : மனிதனை படைக்கையிலே…
மீண்டும் ஏன் மேடு பள்ளம்…
ஏழை நாங்கள் வாடுவதில்…
உனக்கென்ன ஆனந்தம்…

பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா என்னை…
பிஞ்சு முகங்கள் பாத்தாக்க அழுவேனே மெல்ல…

பெண் : புள்ளைங்க பேருலதான் தங்கம் வைரம் இருக்குது…
கூழு கூட கிடைக்காம எங்க வயிறு தவிக்குது… ஆஆ…

BGM


Notes : Pullainga Perulathaan Song Lyrics in Tamil. This Song from Uravai Kaatha Kili (1984). Song Lyrics penned by T. Rajendar. புள்ளைங்க பேருலதான் பாடல் வரிகள்.


இந்த மல்லிகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். ஜானகிடி. ராஜேந்தர்உறவை காத்த கிளி

Intha Malliga Manasa Song Lyrics in Tamil


BGM

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…

பெண் : வாசனை முல்லை வாசமும்மில்லை…
கூந்தலில் வச்சு சங்கதி சொல்ல…
நநநநா நநநநாஆ நநன்னா…

பெண் : தூக்கமுமில்லை தூக்கமும்மில்லை…
ராத்திரி பூரா தூக்கமும்மில்லை…
நநநநா ந்நநநாஆ நநன்னா…

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…

BGM

பெண் : தனியாய் தண்ணி மொள்ள போக… ஆஹ்…
துணையாய் வந்தானடி மெல்ல…
ஏய்… உத்து பார்த்தானடி என்னை…
ஆ… உருகி போனேனடி நாண…

பெண் : கையை புடிச்சி மெல்ல அணைச்சான்…
காத கடிச்சு கதை படிச்சான்…

பெண் : கண் இமை மூட ஆனந்த…
யோகத்தில் மிதந்தேனடி…
கால் விரலாலே தரை மீது…
கோலங்கள் வரைந்தேனடி…

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…

BGM

பெண் : தாழம் கொல்ல பக்கம் போக… ஹ்ஆ…
பாழும் முள்ளில் ஒண்ணு தைக்க… ஹ்ஆ…
காலில் வலி பட்டு துடிக்க…
காளை வந்தானடி எடுக்க…

பெண் : கொஞ்சம் பதமா நல்ல இதமா…
மெல்ல புடிச்சு முள்ள எடுத்தான்…
இரத்தம் கசிந்தோடும் பாதத்தில்…
இதழ் தன்னை வைத்தானடி…

பெண் : நித்தம் இது போல முள்ளொன்று…
குத்தட்டும் என்றானடி…

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…

பெண் : வாசனை முல்லை வாசமும்மில்லை…
கூந்தலில் வச்சு சங்கதி சொல்ல…
நநநநா நநநநாஆ நநன்னா…

பெண் : தூக்கமுமில்லை தூக்கமும்மில்லை…
ராத்திரி பூரா தூக்கமும்மில்லை…
நநநநா நநநநாஆ நநன்னா…

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…


Notes : Intha Malliga Manasa Song Lyrics in Tamil. This Song from Uravai Kaatha Kili (1984). Song Lyrics penned by T. Rajendar. இந்த மல்லிகை பாடல் வரிகள்.


பௌர்ணமி நிலவென

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிடி. ராஜேந்தர்உறவை காத்த கிளி

Pournami Nilavena Song Lyrics in Tamil


BGM

பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்…
எனைப் பார்க்க துடிக்கின்றவன்…
எழில் சிந்த தவிக்கின்றவன்…
பார்த்தாலே போதை கொள்கின்றான்…
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்…

பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்…

BGM

பெண் : ஆசையை தூண்டும் பார்வையில் தூண்டில்…
போட்டுத்தான் நான் பார்க்கின்றேன்…

BGM

பெண் : சொக்கிய ஆண்கள் சிக்கிய மீன்கள்…
எனத் துடிக்க நான் ரசிக்கின்றேன்…

BGM

பெண் : தூக்கத்தைப் கலைக்கின்றவள்…
தொல்லையும் தருகின்றவள்…
பார்த்தாலே போதை கொள்கின்றான்…
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்…

BGM

பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்…

BGM

பெண் : காலடி பட்ட இடத்துக்கு முத்தம்…
கொடுக்கின்றான் ஒரு பித்தனே…
ஆடையைத் திருடி பூஜையும் செய்ய…
துடிக்கின்றான் ஒரு பக்தனே…

BGM

பெண் : மொத்தத்தில் நான் சொர்க்கமே…
பாதத்தில் ஆண் வர்க்கமே…
பார்த்தாலே போதை கொள்கின்றான்…
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்…

பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்…

BGM


Notes : Pournami Nilavena Song Lyrics in Tamil. This Song from Uravai Kaatha Kili (1984). Song Lyrics penned by T. Rajendar. பௌர்ணமி நிலவென பாடல் வரிகள்.


எந்தன் பாடல்களில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்கே.ஜே. யேசுதாஸ் & பி.எஸ். சசிரேகாடி. ராஜேந்தர்உறவை காத்த கிளி

Endhan Paadalgalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே…
நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே…

BGM

ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராமலே மனம் தூங்காதடி…

குழு : தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…

ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராமலே மனம் தூங்காதடி…

ஆண் : வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி…
வஞ்சி மலரே…
ஓ… நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு சொல்லுதடி…
வைர சிலையே…

ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராமலே மனம் தூங்காதடி…

ஆண் : வசந்தம் என்னும் ஒரு பாவை…
நீ அசைந்து வந்த ஒரு சோலை…
வசந்தம் என்னும் ஒரு பாவை…
நீ அசைந்து வந்த ஒரு சோலை…

BGM

குழு : தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…

BGM

ஆண் : பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா…
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா…
பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா…
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா…

பெண் : பொய்கை வண்டாய் உன் கை மாற…
மங்கை நாண செய்கை செய்தாய்…
வைகை போல் நாணத்தில் வளைகின்றேனே…
வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே…

பெண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராவிடில் நித்தம் உறங்காவிழி…

BGM

குழு : தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…

BGM

ஆண் : பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட…
உந்தன் புன்சிரிப்பு…
நெஞ்ச பானையில நித்தம் வேகிறது…
உன் நினைப்பு…

ஆண் : பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட…
உந்தன் புன்சிரிப்பு…
நெஞ்ச பானையில நித்தம் வேகிறது…
உன் நினைப்பு…

பெண் : வார்த்தை தென்றல் நீ வீசும் போது…
ஆடும் பூவாய் ஆனேன் மாது…
இதழோரம் சில்லென்று நனைகின்றது…
சிந்தும் தேன்கூட சிந்தொன்று புனைகின்றது…

ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராமலே மனம் தூங்காதடி…

ஆண் : வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி…
வஞ்சி மலரே…
ஓ… நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு சொல்லுதடி…
வைர சிலையே…

ஆண் : வசந்தம் என்னும் ஒரு பாவை…
நீ அசைந்து வந்த ஒரு சோலை…
வசந்தம் என்னும் ஒரு பாவை…
நீ அசைந்து வந்த ஒரு சோலை…


Notes : Endhan Paadalgalil Song Lyrics in Tamil. This Song from Uravai Kaatha Kili (1984). Song Lyrics penned by T. Rajendar. எந்தன் பாடல்களில் பாடல் வரிகள்.