பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி. ராஜேந்தர் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | டி. ராஜேந்தர் | உறவை காத்த கிளி |
Pournami Nilavena Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்…
எனைப் பார்க்க துடிக்கின்றவன்…
எழில் சிந்த தவிக்கின்றவன்…
பார்த்தாலே போதை கொள்கின்றான்…
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்…
பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்…
—BGM—
பெண் : ஆசையை தூண்டும் பார்வையில் தூண்டில்…
போட்டுத்தான் நான் பார்க்கின்றேன்…
—BGM—
பெண் : சொக்கிய ஆண்கள் சிக்கிய மீன்கள்…
எனத் துடிக்க நான் ரசிக்கின்றேன்…
—BGM—
பெண் : தூக்கத்தைப் கலைக்கின்றவள்…
தொல்லையும் தருகின்றவள்…
பார்த்தாலே போதை கொள்கின்றான்…
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்…
—BGM—
பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்…
—BGM—
பெண் : காலடி பட்ட இடத்துக்கு முத்தம்…
கொடுக்கின்றான் ஒரு பித்தனே…
ஆடையைத் திருடி பூஜையும் செய்ய…
துடிக்கின்றான் ஒரு பக்தனே…
—BGM—
பெண் : மொத்தத்தில் நான் சொர்க்கமே…
பாதத்தில் ஆண் வர்க்கமே…
பார்த்தாலே போதை கொள்கின்றான்…
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்…
பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்…
—BGM—
Notes : Pournami Nilavena Song Lyrics in Tamil. This Song from Uravai Kaatha Kili (1984). Song Lyrics penned by T. Rajendar. பௌர்ணமி நிலவென பாடல் வரிகள்.