Category Archives: கைராசிக்காரன்

கைராசிக்காரன் – Kairasikkaran (1984)

நிலவொன்று கண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகைராசிக்காரன்

Nilavondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…
கனவொன்று கண்டேன் உன் கண்களில்…
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…

ஆண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…

BGM

பெண் : கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்…
பனித் தோட்டம் யாவும் அனலாக மாறும்…

ஆண் : சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்…
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்…

பெண் : பூவுக்கு வாய்ப்பூட்டு என் சோகம் நீ மாற்று…
ஆண் : என் வாழ்விலே தீபம் ஏற்று…

பெண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…
கனவொன்று கண்டேன் உன் கண்களில்…
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…

பெண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…

BGM

ஆண் : நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே…
பெண் : நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே…

ஆண் : உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே…
உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே…

பெண் : நான் இங்கு நானல்ல என் துன்பம் யார் சொல்ல…
ஆண் : என் தெய்வமே நீ பெண்ணல்ல…

பெண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…
ஆண் : கனவொன்று கண்டேன் உன் கண்களில்…

பெண் : கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…
ஆண் : கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…

பெண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…


Notes : Nilavondru Song Lyrics in Tamil. This Song from Kairasikkaran (1984). Song Lyrics penned by Vairamuthu. நிலவொன்று கண்டேன் பாடல் வரிகள்.


கை வீசும் தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகைராசிக்காரன்

Kai Veesum Thamarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கை வீசும் தாமரை…
கல்யாண தேவதை…
பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்…

பெண் : கை வீசும் தாமரை…
கல்யாண தேவதை…
பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்…
காதல் கொண்டாள்

பெண் : கை வீசும் தாமரை…
கல்யாண தேவதை…

BGM

பெண் : பூ ஒன்று இப்போது செண்டானது…
நீ தீண்ட பேரின்பம் உண்டானது…

ஆண் : பொன்வண்டு தேன் கேட்டு மன்றாடுது…
நான் உண்ணும் தேன் இன்னும் சிந்தாதது…

பெண் : என் சேலையில் வான் மின்னல்தான் வந்து நூலாகுமே…
ஆண் : என் சோலையில் வேர் கூட பூ பூக்கும் ஓர் காலமே…
பெண் : சந்தோஷம் தாலாட்டுமே… ஏ…

ஆண் : கை வீசும் தாமரை…
கல்யாண தேவதை…

பெண் : பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்…
காதல் கொண்டாள்…

பெண் : கை வீசும் தாமரை…
ஆண் : கல்யாண தேவதை…

BGM

ஆண் : என் சாலை வழியாக தேர் வந்தது…
பெண் என்று இப்போது பேர் கொண்டது…

பெண் : பேரன்பு இதன் முன்பு யார் கண்டது…
என் கண்கள் இப்போது நீர் கொண்டது…

ஆண் : உன் வார்த்தையே…
பெயர் இன்னும் வைக்காத புது ராகமா…

பெண் : உன் கண்களே…
என் வாழ்வில் ஒளி காட்டும் பொன் தீபமா…

ஆண் : ஏன் இன்னும் சந்தேகமா… ஆ…

பெண் : கை வீசும் தாமரை…
கல்யாண தேவதை…

ஆண் : பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்…
காதல் கொண்டாள்…

ஆண் : கை வீசும் தாமரை…
பெண் : ஆஹா…
ஆண் : கல்யாண தேவதை…
பெண் : அஹ ஹா…


Notes : Kai Veesum Thamarai Song Lyrics in Tamil. This Song from Kairasikkaran (1984). Song Lyrics penned by Vairamuthu. கை வீசும் தாமரை பாடல் வரிகள்.