Category Archives: என்னெப்பெத்த ராசா

சொந்தம் ஒன்றை தேடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மனோ, பி. சுசீலா & கே.எஸ். சித்ராஇளையராஜாஎன்னெப்பெத்த ராசா

Sondham Ondrai Song Lyrics in Tamil


பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…

BGM

பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…
இந்த குரல் கேட்குதா…
இன்பம் தன்னை தூண்டுதா…
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது…
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது…

ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…

BGM

ஆண் : வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று…
தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்…
வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று…
தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்…

ஆண் : எந்தன் தவம்தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா…
அம்புலியும் பூமி தன்னில் உன் உருவில் வந்ததம்மா…

ஆண் : வீதி வழி போனால் வெள்ளி ரதம்…
தரையில் நடந்தாலே தங்க ரதம்…
உன்னை என்னை தெய்வம் இணைத்தது…

பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…

BGM

பெண் : சிறு வீணை தான் எடுத்து விரலாலே சுருதி எழுப்பி…
குறுநகையாள் பாடுவதை குறும்புடனே கேட்டிரோ…
சிறு வீணை தான் எடுத்து விரலாலே சுருதி எழுப்பி…
குறுநகையாள் பாடுவதை குறும்புடனே கேட்டிரோ…

பெண் : பாடல் தனில் நீ மயங்கி…
பைங்கொடியை வேண்டுமென்றாய்…
குரல்தனிலே நீ கிறங்கி…
குலக்கொடியை வேண்டுமென்றாய்…

பெண் : ஈசன் அருள் உனக்கே இருந்தது…
ஏந்திழையின் மனமும் இணைந்தது…
நம்மை அன்புதானே இணைத்தது…

ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…
இந்த குரல் கேட்குதா…
இன்பம் தன்னை தூண்டுதா…
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது…
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது…

பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…


Notes : Sondham Ondrai Song Lyrics in Tamil. This Song from Enna Petta Rasa (1989). Song Lyrics penned by Piraisoodan. சொந்தம் ஒன்றை தேடும் பாடல் வரிகள்.


petha-manasu-song-lyrics

பெத்த மனசு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாஎன்னெப்பெத்த ராசா

Petha Manasu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…
தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கும் மேலதான்…
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கும் மேலதான்…

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…

BGM

ஆண் : வெறுங்கைய வீசிக் கொண்டு விறகு சுமந்து விட்டு…
இரவா பகலா தினம் தினம் உளைச்சதும்…
சருகு பொறுக்கி வந்து சாதம் வடிச்சுத் தந்து…
பசியே தெரியா மகனா வளர்த்ததும்…

ஆண் : எத்தன தாயுங்க நம்ம தமிழ் நாட்டிலே…
என் தாயி அவளப்போல் யாரு இந்த ஊரிலே…
தியாகி யாரு தியாகி யாரும் இல்ல போடா…
தாயின் கால வணங்கி கும்பிட்டுட்டு வாடா…
அவதான் கோயில் அவதான் உலகம்…

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…

BGM

ஆண் : மண்ணில் வரும் செடி கொடிகள் எவ்வளவு வகைகள்தான்…
மரமோ கொடியோ தண்ணி மட்டும் ஒண்ணேதான்…
பல வித மரங்கள் என்ன மரத்தில பழங்கள் என்ன…
நிறத்தில் ருசியில் ஒவ்வொண்ணும் வேறதான்…

ஆண் : பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா…
காயாய் இருப்பதால் கொய்யா கசக்குமா…
நல்ல வயித்தில் பொறந்தா நல்லவனேதாண்டா…
கெட்டது செய்யமாட்டான் வல்லவனேதாண்டா…
அவனே மனிதன் அதை நீ உணரு…

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…
தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கு மேலதான்…
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கும் மேலதான்…


Notes : Petha Manasu Song Lyrics in Tamil. This Song from Enna Petta Rasa (1989). Song Lyrics penned by Ilaiyaraaja. பெத்த மனசு பாடல் வரிகள்.