சொந்தம் ஒன்றை தேடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மனோ, பி. சுசீலா & கே.எஸ். சித்ராஇளையராஜாஎன்னெப்பெத்த ராசா

Sondham Ondrai Song Lyrics in Tamil


பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…

BGM

பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…
இந்த குரல் கேட்குதா…
இன்பம் தன்னை தூண்டுதா…
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது…
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது…

ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…

BGM

ஆண் : வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று…
தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்…
வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று…
தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்…

ஆண் : எந்தன் தவம்தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா…
அம்புலியும் பூமி தன்னில் உன் உருவில் வந்ததம்மா…

ஆண் : வீதி வழி போனால் வெள்ளி ரதம்…
தரையில் நடந்தாலே தங்க ரதம்…
உன்னை என்னை தெய்வம் இணைத்தது…

பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…

BGM

பெண் : சிறு வீணை தான் எடுத்து விரலாலே சுருதி எழுப்பி…
குறுநகையாள் பாடுவதை குறும்புடனே கேட்டிரோ…
சிறு வீணை தான் எடுத்து விரலாலே சுருதி எழுப்பி…
குறுநகையாள் பாடுவதை குறும்புடனே கேட்டிரோ…

பெண் : பாடல் தனில் நீ மயங்கி…
பைங்கொடியை வேண்டுமென்றாய்…
குரல்தனிலே நீ கிறங்கி…
குலக்கொடியை வேண்டுமென்றாய்…

பெண் : ஈசன் அருள் உனக்கே இருந்தது…
ஏந்திழையின் மனமும் இணைந்தது…
நம்மை அன்புதானே இணைத்தது…

ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…
இந்த குரல் கேட்குதா…
இன்பம் தன்னை தூண்டுதா…
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது…
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது…

பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…


Notes : Sondham Ondrai Song Lyrics in Tamil. This Song from Enna Petta Rasa (1989). Song Lyrics penned by Piraisoodan. சொந்தம் ஒன்றை தேடும் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top