Category Archives: அழகே உன்னை ஆராதிக்கிறேன்

அழகே உன்னை ஆராதிக்கிறேன் – Azhage Unnai Aarathikkiren (1979)

நானே நானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவாணி ஜெயராம்இளையராஜாஅழகே உன்னை ஆராதிக்கிறேன்

Naane Naana Yaro Thana Song Lyrics in Tamil


BGM

பெண் : நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…
நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…

பெண் : தன்னைத்தானே மறந்தேனே…
என்னை நானே கேட்கிறேன்…

பெண் : நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…

BGM

பெண் : ஒருவன் நினைவிலே உருகும் இதயமே…
இதோ துடிக்க…
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்…
எதோ படிக்க…

பெண் : மதுவின் மயக்கமே உனது மடியில் இனிமேல்…
இவள்தான் சரணம் சரணம்…

பெண் : நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…
மெல்ல மெல்ல மாறினேனா…

BGM

பெண் : பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்…
ஒரே நிலவு…
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்…
ஒரே மனது…

பெண் : பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்…
நரகம் சரணம் சரணம்…

பெண் : நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…

பெண் : தன்னைத்தானே மறந்தேனே…
என்னை நானே கேட்கிறேன்…

பெண் : நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…


Notes : Naane Naana Yaro Thana Song Lyrics in Tamil. This Song from Azhage Unnai Aarathikkiren (1979). Song Lyrics penned by Vaali. நானே நானா பாடல் வரிகள்.


குறிஞ்சி மலரில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்இளையராஜாஅழகே உன்னை ஆராதிக்கிறேன்

Kurinji Malaril Song Lyrics in Tamil


BGM

ஆண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை…
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க…
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன…
என் மனம் வாடியதென்ன…

ஆண் : ஒரு மாலையிடவும் சேலை தொடவும்…
வேளை பிறந்தாலும்…
அந்தி மாலை பொழுதில் லீலை புரியும்…
ஆசை பிறக்காதோ…

ஆண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை…
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க…
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன…
என் மனம் வாடியதென்ன…

BGM

பெண் : மேள தாளம் முழங்கும் முதல் நாள் இரவு…
மேனி மீது எழுதும் மடல்தான் உறவு…
தலையில் இருந்து பாதம் வரையில் தழுவி கொள்ளலாம்…

ஆண் : அதுவரையில் நான்…
அதுவரையில் நான் அனலில் மெழுகோ…
அலைக் கடலில்தான் அலையும் படகோ…

பெண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை…
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்…
வாடியதென்ன பூவிதழ் தேடியதென்ன…
என்னிடம் நாடியதென்ன…

பெண் : ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்…
வேளை பிறக்காதோ…
அந்த வேளை வரையில் காளை உனது…
உள்ளம் பொறுக்காதோ…

BGM

ஆண் : காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க…
கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க…
இடையில் வந்து தடைகள் சொல்ல எவரும் இல்லையே…

பெண் : பிறர் அறியாமல்…
பிறர் அறியாமல் பழகும் போது…
பயம் அறியாத இதயம் ஏது…

BGM

பெண் : வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்…
ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்…
உனது ராகம் உதயம் ஆகும் இனிய வீணை நான்…

ஆண் : சுதி விலகாமல் இணையும் நேரம்…
சுவைக் குறையாமல் இருக்கும் கீதம்…

பெண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை…
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன…
ஆண் : பூவிதழ் மூடியதென்ன…
பெண் : என்னிடம் நாடியதென்ன…

ஆண் : ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்…
வேளை பிறந்தாலும்…

பெண் : அந்த வேளை வரையில் காளை உனது…
உள்ளம் பொறுக்காதோ…


Notes : Kurinji Malaril Song Lyrics in Tamil. This Song from Azhage Unnai Aarathikkiren (1979). Song Lyrics penned by Vaali. குறிஞ்சி மலரில் பாடல் வரிகள்.