Category Archives: அவள் ஒரு தொடர்கதை

Deivam Thandha Veedu Song Lyrics in Tamil

தெய்வம் தந்த வீடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன்அவள் ஒரு தொடர்கதை

Deivam Thandha Veedu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…

BGM

ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன…
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே…

ஆண் : வாழ்வின் பொருள் என்ன…
நீ வந்த கதை என்ன…
வாழ்வின் பொருள் என்ன…
நீ வந்த கதை என்ன…

BGM

ஆண் : நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா… ஆஆஆ…

—BGM—

ஆண் : நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா…
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா…
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி…
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி…

ஆண் : ஆதி வீடு அந்தம் காடு…
இதில் நான் என்ன…
அடியே நீ என்ன ஞானப் பெண்ணே…
வாழ்வின் பொருள் என்ன…
நீ வந்த கதை என்ன…

ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…

BGM

ஆண் : வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்…
உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்…
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி…
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி…

ஆண் : கொண்டதென்ன கொடுப்பதென்ன…
இதில் தாய் என்ன…
மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே…
வாழ்வின் பொருள் என்ன…
நீ வந்த கதை என்ன…

BGM

ஆண் : தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்…
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்…
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி…
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி…

ஆண் : உண்மை என்ன பொய்மை என்ன…
இதில் தேன் என்ன…
கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே…
வாழ்வின் பொருள் என்ன…
நீ வந்த கதை என்ன…

ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…


Notes : Deivam Thandha Veedu Song Lyrics in Tamil. This Song from Aval Oru Thodharkadai (1974). Song Lyrics penned by Kannadasan. தெய்வம் தந்த வீடு பாடல் வரிகள்.


கடவுள் அமைத்து வைத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ்.விஸ்வநாதன்அவள் ஒரு தொடர்கதை

Kadavul Amaithu Vaitha Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…

BGM

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…

ஆண் : நான் ஒரு விகடகவி…
இன்று நான் ஒரு கதை சொல்வேன்…
ஓங்கிய பெரும் காடு…

BGM

ஆண் : அதில் உயர்ந்தொரு ஆலமரம்…
ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே…

ஆண் : ஆண்கிளி இரண்டுண்டு…
பெண்கிளி இரண்டுண்டு…
அங்கேயும் ஆசை உண்டு…

ஆண் : அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி…
இரண்டுக்கும் மயக்கம் உண்டு…
அன்பே ஆருயிரே என் அத்தான்…

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…

BGM

ஆண் : கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள்…
கொண்டாட்டம் கேட்டதம்மா…

BGM

ஆண் : கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள்…
கொண்டாட்டம் கேட்டதம்மா…
ஆசை விமானத்தில் ஆனந்த வேகத்தில்…
சீர் கொண்டு வந்ததம்மா…

BGM

ஆண் : தேன்மொழி மங்கையர் யாழிசை மீட்டிட…
ஊர்கோலம் போனதம்மா…
சிங்கார காலோடு சங்கீத தண்டைகள்…
சந்தோஷம் பாடுதம்மா…

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…

BGM

ஆண் : கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து…
வாழ்த்தொன்று கூறுதம்மா…

ஆண் : கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள்…
ஆங்கிலம் பாடுதம்மா…

ஆண் : பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள்…
மந்திரம் ஓதுதம்மா…

ஆண் : பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள்…
மந்திரம் ஓதுதம்மா…
பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள்…
பல்லாண்டு பாடுதம்மா…

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…

BGM

ஆண் : ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து…
உறவுக்குள் நுழையுதம்மா…
உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட…
ஒரு கிளி ஒதுங்குதம்மா…

ஆண் : அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது…
அப்போது புரிந்ததம்மா…
அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளைதான்…
இப்போது தெரிந்ததம்மா…

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…

ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…


Notes : Kadavul Amaithu Vaitha Song Lyrics in Tamil. This Song from Aval Oru Thodharkadai (1974). Song Lyrics penned by Kannadasan. கடவுள் அமைத்து வைத்த பாடல் வரிகள்.