பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | எம்.எஸ்.விஸ்வநாதன் | அவள் ஒரு தொடர்கதை |
Kadavul Amaithu Vaitha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…
—BGM—
ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…
ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…
ஆண் : நான் ஒரு விகடகவி…
இன்று நான் ஒரு கதை சொல்வேன்…
ஓங்கிய பெரும் காடு…
—BGM—
ஆண் : அதில் உயர்ந்தொரு ஆலமரம்…
ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே…
ஆண் : ஆண்கிளி இரண்டுண்டு…
பெண்கிளி இரண்டுண்டு…
அங்கேயும் ஆசை உண்டு…
ஆண் : அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி…
இரண்டுக்கும் மயக்கம் உண்டு…
அன்பே ஆருயிரே என் அத்தான்…
ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…
—BGM—
ஆண் : கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள்…
கொண்டாட்டம் கேட்டதம்மா…
—BGM—
ஆண் : கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள்…
கொண்டாட்டம் கேட்டதம்மா…
ஆசை விமானத்தில் ஆனந்த வேகத்தில்…
சீர் கொண்டு வந்ததம்மா…
—BGM—
ஆண் : தேன்மொழி மங்கையர் யாழிசை மீட்டிட…
ஊர்கோலம் போனதம்மா…
சிங்கார காலோடு சங்கீத தண்டைகள்…
சந்தோஷம் பாடுதம்மா…
ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…
—BGM—
ஆண் : கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து…
வாழ்த்தொன்று கூறுதம்மா…
ஆண் : கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள்…
ஆங்கிலம் பாடுதம்மா…
ஆண் : பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள்…
மந்திரம் ஓதுதம்மா…
ஆண் : பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள்…
மந்திரம் ஓதுதம்மா…
பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள்…
பல்லாண்டு பாடுதம்மா…
ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…
—BGM—
ஆண் : ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து…
உறவுக்குள் நுழையுதம்மா…
உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட…
ஒரு கிளி ஒதுங்குதம்மா…
ஆண் : அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது…
அப்போது புரிந்ததம்மா…
அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளைதான்…
இப்போது தெரிந்ததம்மா…
ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…
ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…
Notes : Kadavul Amaithu Vaitha Song Lyrics in Tamil. This Song from Aval Oru Thodharkadai (1974). Song Lyrics penned by Kannadasan. கடவுள் அமைத்து வைத்த பாடல் வரிகள்.