Category Archives: வீரத் திருமகன்

Roja Malarae Song Lyrics in Tamil

ரோஜா மலரே ராஜகுமாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி.பி.ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திவீரத் திருமகன்

Roja Malarae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரோஜா மலரே ராஜ குமாரி…
ஆசை கிளியே அழகிய ராணி…
அருகில் வரலாமா… ஹோய்…
வருவதும் சரிதானா…
உறவும் முறைதானா…

பெண் : வாராய் அருகே மன்னவன் நீயே…
காதல் கணம் அன்றோ… ஓஓ…
பேதம் இல்லை அன்றோ… ஓஓ…
காதல் நிலை அன்றோ… ஓஓ…

பெண் : ஏழை என்றாலும் ராஜகுமாரன்…
ராஜா மகளின் காதல் தலைவன்…
உண்மை இதுவன்றோ… ஹோ…
உலகின் முறை அன்றோ… ஓஓ…
என்றும் நிலை அன்றோ… ஓஓ…

BGM

ஆண் : வானத்தின் மீது பறந்தாலும்…
காக்கை கிளியாய் மாறாது…
கோட்டையின் மேலே நின்றாலும்…
ஏழையின் பெருமை உயராது…

ஆண் : ஓடி அலைந்து காதலில் கலந்து…
நாட்டை இழந்தவர் பலர் அன்றோ…
ஓடி அலைந்து காதலில் கலந்து…
நாட்டை இழந்தவர் பலர் அன்றோ…

பெண் : மன்னவர் நாடும் மணி முடியும்…
மாளிகை வாழும் தோழியரும்…
பஞ்சனை சுகமும் பால் பழமும்…
படையும் உடையும் சேவகரும்…

பெண் : ஒன்றாய் இணையும் காதலர் முன்னே…
கானல் நீர் போல் மறையாதோ…
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே…
கானல் நீர் போல் மறையாதோ…

ஆண் : ரோஜா மலரே ராஜ குமாரி…
ஆசை கிளியே அழகிய ராணி…
அருகில் வரலாமா… ஹோய்…
வருவதும் சரிதானா…
உறவும் முறைதானா…

BGM

ஆண் : பாடும் பறவை கூட்டங்களே…
பச்சை ஆடை தோட்டங்களே…

பெண் : விண்ணில் தவழும் ராகங்களே…
வேகம் போகும் மேகங்களே…

ஆண் & பெண் : ஓர் வழி கண்டோம்…
ஒரு மனமானோம்…
வாழிய பாடல் பாடுங்களேன்…

ஆண் & பெண் : ஓர் வழி கண்டோம்…
ஒரு மனமானோம்…
வாழிய பாடல் பாடுங்களேன்…

ஆண் : ரோஜா மலரே ராஜ குமாரி…
பெண் : ஏழை என்றாலும் ராஜகுமாரன்…

ஆண் & பெண் : உண்மை இதுவன்றோ… ஹோய்…
உலகின் முறை அன்றோ… ஓஓ…
என்றும் நிலை அன்றோ… ஓஓ…

BGM


Notes : Roja Malarae Song Lyrics in Tamil. This Song from Veerathirumugan (1962). Song Lyrics penned by Kannadasan. ரோஜா மலரே ராஜகுமாரி பாடல் வரிகள்.


பாடாத பாட்டெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி.பி.ஸ்ரீனிவாஸ் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திவீரத் திருமகன்

Paadatha Paatellam Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…

ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…

BGM

ஆண் : மேலாடை தென்றலில்… ஆஹா ஹா…
பூவாடை வந்ததே… ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
மேலாடை தென்றலில்… ஆஹா ஹா…
பூவாடை வந்ததே… ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…

ஆண் : கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்…
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்…

ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…

BGM

ஆண் : அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா…
பெண் : ஆஹா…
ஆண் : அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா…
பெண் : ஓஹோ…

ஆண் : அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா…
பெண் : ஆஹா…
ஆண் : அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா…
பெண் : ஓஹோ…

ஆண் : மிச்சமா மீதமா இந்த நாடகம்…
பெண் : ஆஹா…
ஆண் : மென்மையே பெண்மையே வா வா வா…
பெண் : ஆஹா…

ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…

BGM

ஆண் : நிலவிலே நிலவிலே சேதி வந்ததா…
பெண் : ஆஆ… ஆஆ…
ஆண் : உறவிலே உறவிலே ஆசை வந்ததா…
பெண் : ஓஓ…

ஆண் : நிலவிலே நிலவிலே சேதி வந்ததா…
பெண் : ஆஆ… ஆஆ…
ஆண் : உறவிலே உறவிலே ஆசை வந்ததா…
பெண் : ஓஓ…

ஆண் : மறைவிலே மறைவிலே ஆடல் ஆகுமா…
பெண் : ஆஹா ஆஆ…
ஆண் : அருகிலே அருகிலே வந்து பேசம்மா…
பெண் : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…


Notes : Paadatha Paatellam Song Lyrics in Tamil. This Song from Veerathirumugan (1962). Song Lyrics penned by Kannadasan. பாடாத பாட்டெல்லாம் பாடல் வரிகள்.