Category Archives: 1950’s Movies

Kannum Kannum Kalandhu Song Lyrics in Tamil

கண்ணும் கண்ணும் கலந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கொத்தமங்கலம் சுப்புபி. லீலா & ஜிக்கிசி.ராமச்சந்திரா & ஆர்.வைத்தியநாதன்வஞ்சிக்கோட்டை வாலிபன்

Kannum Kannum Kalandhu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏனோ இன்பமே புதுமையாய் காண்பதே…
காதல் என்பது இதுதானோ…
இதுதானோ அறியேனே…

பெண் : கண்ணும் கண்ணும் கலந்து…
சொந்தம் கொண்டாடுதே…
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே…

பெண் : கண்ணும் கண்ணும் கலந்து…
சொந்தம் கொண்டாடுதே…
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே…

பெண் : கன்னி என்றேனடி கைகளை பிடித்தார்…
காதலி என்றென்னை கொஞ்சியே அழைத்தார்…

பெண் : கண்ணும் கண்ணும் கலந்து…
சொந்தம் கொண்டாடுதே…
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே…

BGM

ஆண் : சபாஷ் சரியான போட்டி…

—BGM—

பெண் : ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே…
ஜகத்தை மயக்கிடுவேனே…
கல கல கல கலவென்று ஜோராய்…
கையில் வளை பேசும் பாராய்…

பெண் : ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே…
ஜகத்தை மயக்கிடுவேனே…
கல கல கல கலவென்று ஜோராய்…
கையில் வளை பேசும் பாராய்…

BGM

பெண் : ஆடுவேன் பாரடி…
பாடுவேன் கேளடி…
ஆடுவேன் பாரடி…
இனி அனைவரும் மயங்கிட…

பெண் : ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே…
ஜகத்தை மயக்கிடுவேனே…
கல கல கல கலவென்று ஜோராய்…
கையில் வளை பேசும் பாராய்…

BGM

பெண் : ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்…
அன்பின் பாதையில் அணையிடலாமோ…
ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்…
அன்பின் பாதையில் அணையிடலாமோ…
பேதமையாலே மாதே இப்போதே…
காதலை வென்றிட கனவு காணாதே…

BGM

பெண் : சாதுர்யம் பேசாதேடி…
என் சலங்கைக்கு பதில் சொல்லடி…
சாதுர்யம் பேசாதேடி…
என் சலங்கைக்கு பதில் சொல்லடி…

பெண் : நடுவிலே வந்து நில்லடி…
நடையிலே சொல்லடி…
நடுவிலே வந்து நில்லடி…
நடையிலே சொல்லடி…

BGM

பெண் : ஆடும் மயில் எந்தன் முன்னே…
என்ன ஆணவத்தில் வந்தாயோடி…
பாடும் குயில் கீதத்திலே…
பொறாமை கொண்டு படமெடுத்து ஆடேதடி…
நீ படமெடுத்து ஆடேதடி…

BGM

பெண் : இன்னொருத்தி நிகராகுமோ…
எனக்கின்னொருத்தி நிகராகுமோ…
இடி இடித்தால் மழையாகுமோ…
பேதை பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ…

BGM

பெண் : மின்னலுக்கு அஞ்சேனடி…
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி…
இந்த மின்னலுக்கு அஞ்சேனடி…
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி…

BGM


Notes : Kannum Kannum Kalandhu Song Lyrics in Tamil. This Song from Vanji Kottai Valipan (1958). Song Lyrics penned by Kothamangalam Subbu. கண்ணும் கண்ணும் கலந்து பாடல் வரிகள்.


மாசிலா உண்மைக் காதலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிஏ.எம்.ராஜா & பி. பானுமதிசுசர்லா தட்சிணாமூர்த்திஅலிபாபாவும் நாற்பது திருடர்களும்

Masila Unmai Kathale Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…
மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…

பெண் : பேசும் வார்த்தை உண்மைதானா…
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா…
பேசும் வார்த்தை உண்மைதானா…
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா…

ஆண் : கண்ணிலே மின்னும் காதலே…
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே…

BGM

ஆண் : நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே…
பெண் : நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே…

BGM

ஆண் : நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே…
பெண் : நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே…

பெண் : பேசும் வார்த்தை உண்மைதானா…
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா…
மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…

ஆண் : கண்ணிலே மின்னும் காதலே…
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே…

BGM

ஆண் : உந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே…
பெண் : இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே…

BGM

ஆண் : உந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே…
பெண் : இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே…

ஆண் & பெண் : அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்…
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்…
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்…
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்…

ஆண் & பெண் : மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…
மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…
மாறுமோ…


Notes : Masila Unmai Kathale Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. மாசிலா உண்மைக் காதலே பாடல் வரிகள்.


சித்தாடை கட்டிகிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிஎஸ்.சி.கிருஷ்ணன் & பி. சுசீலாகே.வி. மகாதேவன்வண்ணக்கிளி

Chithadi Kattikittu Song Lyrics in Tamil


பெண் : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…

குழு : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…

பெண் : அத்தானை பாத்து…
அசந்து போய் நின்னாளாம்…

குழு : அத்தானை பாத்து…
அசந்து போய் நின்னாளாம்…

குழு : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…

ஆண் : முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…

குழு : முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…

ஆண் : வெத்தாக பேசி…
இளம் மனச தொட்டானாம்…

குழு : வெத்தாக பேசி…
இளம் மனச தொட்டானாம்…

குழு : ஹான்… முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…

BGM

பெண் : குண்டூசி போல ரெண்டு…
கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பா…
பேசும் நல்லவளாம்…

BGM

குழு : குண்டூசி போல ரெண்டு…
கண்ணும் உள்ளவளாம்…
முகம் கோணாமல் ஆசை அன்பா…
பேசும் நல்லவளாம்…

பெண் : அந்த கண்டாங்கி சேலைக்காரி…
கைக்காரியாம்…

குழு : அந்த கண்டாங்கி சேலைக்காரி…
கைக்காரியாம்…

குழு : அந்த கள்ளி அத்தானை…
கல்யாணம் பண்ணி கொண்டாளாம்…

குழு : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…

BGM

ஆண் : அஞ்சாத சிங்கம் போலே…
வீரம் உள்ளவனாம்…
யானை வந்தாலும் பந்தாடி…
ஜெய்க்க வல்லவனாம்…

BGM

குழு : அஞ்சாத சிங்கம் போலே…
வீரம் உள்ளவனாம்…
யானை வந்தாலும் பந்தாடி…
ஜெய்க்க வல்லவனாம்…

ஆண் : அந்த முண்டாசுக்காரன்…
கொஞ்சம் முன்கோபியாம்…

குழு : அந்த முண்டாசுக்காரன்…
கொஞ்சம் முன்கோபியாம்…

குழு : ஆனாலும் பெண் என்றால்…
அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்…

குழு : ஹான்… முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…

BGM

பெண் : முன்னூறு நாளை மட்டும்…
எண்ணிக்கொள்ளுங்க…

ஆண் : அதன் பின்னாலே என்ன ஆகும்…
நீங்க சொல்லுங்க…

BGM

குழு : முன்னூறு நாளை மட்டும்…
எண்ணிக்கொள்ளுங்க…

குழு : அதன் பின்னாலே என்ன ஆகும்…
நீங்க சொல்லுங்க…

பெண் : அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து…
மூணாகும்ங்க…

ஆண் : இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து…
மூணாகும்ங்க…

குழு : அதை கண்டு சந்தோசம்…
கொண்டாடி பாட போறாங்க…

குழு : கண்டு சந்தோசம்…
கொண்டாடி பாட போறாங்க…

பெண் : சித்தாடை கட்டிகிட்டு…
ஆண் : சிங்காரம் பண்ணிகிட்டு…
பெண் : மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
ஆண் : மயிலாக வந்தாளாம்…

பெண் : முத்தாத அரும்பெடுத்து…
ஆண் : முழ நீள சரம் தொடுத்து…
பெண் : வித்தார கள்ளி கழுத்தில்…
ஆண் : முத்தாரம் போட்டானாம்…

பெண் : மயிலாக வந்தாளாம்…
ஆண் : முத்தாரம் போட்டானாம்…
பெண் : மயிலாக வந்தாளாம்…
ஆண் : முத்தாரம் போட்டானாம்…

BGM


Notes : Chithadi Kattikittu Song Lyrics in Tamil. This Song from Vannakili (1959). Song Lyrics penned by A. Maruthakasi. சித்தாடை கட்டிகிட்டு பாடல் வரிகள்.


அழகான பொண்ணு நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிபி. பானுமதிசுசர்லா தட்சிணாமூர்த்திஅலிபாபாவும் நாற்பது திருடர்களும்

Azhagana Ponnu Naan Song Lyrics in Tamil


BGM

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…
என்கிட்ட இருப்பதெல்லம்…
தன்மானம் ஒன்னுதான்…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…
என்கிட்ட இருப்பதெல்லம்…
தன்மானம் ஒன்னுதான்…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…

BGM

பெண் : ஈடில்லா காட்டு ரோஜா…
இதை நீங்க பாருங்க…

BGM

பெண் : ஈடில்லா காட்டு ரோஜா…
இதை நீங்க பாருங்க…
எவரேனும் பறிக்க வந்தா…
குணமேதான் மாறுங்க…
முள்ளேதான் குத்துங்க…

BGM

பெண் : எவரேனும் பறிக்க வந்தா…
குணமேதான் மாறுங்க…
முள்ளேதான் குத்துங்க… ஓஓ… ஓஓ… ஓஓ…

பெண் : அங்கொண்ணு இளிக்குது…
ஆந்தைப் போல் முழிக்குது…

பெண் : அங்கொண்ணு இளிக்குது…
ஆந்தைப் போல் முழிக்குது…
ஆட்டத்தை ரசிக்கவில்லை…
ஆளைத்தான் ரசிக்குது…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…
என்கிட்ட இருப்பதெல்லம்…
தன்மானம் ஒன்னுதான்…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…

BGM

பெண் : இங்கொண்ணு என்னைப்பாத்து…
கண்ஜாடை பண்ணுது…

BGM

பெண் : இங்கொண்ணு என்னைப்பாத்து…
கண்ஜாடை பண்ணுது…
ஏமாளிப் பொண்ணுயின்னு…
ஏதேதோ எண்ணுது…
ஏதேதோ எண்ணுது…

BGM

பெண் : ஏமாளிப் பொண்ணுயின்னு…
ஏதேதோ எண்ணுது…
ஏதேதோ எண்ணுது… ஓஓ… ஓஓ… ஓஓ…

பெண் : பெண்ஜாதிய தவிக்கவிட்டு…
பேயாட்டம் ஆடுது…

பெண் : பெண்ஜாதிய தவிக்கவிட்டு…
பேயாட்டம் ஆடுது…
பித்தாகி என்னைச் சுத்தி…
கைத்தாளம் போடுது…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…
என்கிட்ட இருப்பதெல்லம்…
தன்மானம் ஒன்னுதான்…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…


Notes : Azhagana Ponnu Naan Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. அழகான பொண்ணு நான் பாடல் வரிகள்.


சின்னஞ்சிறு கிளியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி பாரதியார்வி.என்.சுந்தரம் & எம்.எல்.வசந்தகுமாரிசி.ஆர்.சுப்புராமன்மணமகள்

Chinnanchiru Kiliye Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…
செல்வ களஞ்சியமே…
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…
செல்வ களஞ்சியமே…

பெண் : என்னை கலி தீர்த்தே உலகில்…
என்னை கலி தீர்த்தே உலகில்…
ஏற்றம் புரிய வந்தாய்… ஆ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…
சின்னஞ்சிறு கிளியே…

பெண் : பிள்ளை கனி அமுதே கண்ணம்மா…
பேசும் பொற்சித்திரமே… ஏ…
பிள்ளை கனி அமுதே கண்ணம்மா…
பேசும் பொற்சித்திரமே… ஏ…

பெண் : அள்ளி அணைத்திடவே என் முன்னே…
அள்ளி அணைத்திடவே என் முன்னே…
ஆடி வரும் தேனே… ஏ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…
சின்னஞ்சிறு கிளியே…

பெண் : ஓடி வருகையிலே கண்ணம்மா…
உள்ளம் குளிருதடி…
ஓடி வருகையிலே கண்ணம்மா…
உள்ளம் குளிருதடி…

பெண் : ஆடி திரிதல் கண்டால் உன்னை போய்…
ஆடி திரிதல் கண்டால் உன்னை போய்…
ஆவி தழுவுதடி…

பெண் : உச்சி தன்னை முகர்ந்தால்…
கர்வம் ஓங்கி வளருதடி…
உச்சி தன்னை முகர்ந்தால்…
கர்வம் ஓங்கி வளருதடி…

பெண் : மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்…
மேனி சிலிர்க்குதடி…
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்…
மேனி சிலிர்க்குதடி…

ஆண் : கன்னத்தில் முத்தமிட்டாள்…
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி…
கன்னத்தில் முத்தமிட்டாள்…
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி…
கன்னத்தில் முத்தமிட்டாள்…
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி…

ஆண் : உன்னை தழுவிடிலோ கண்ணம்மா…
உன்மத்தம் ஆகுதடி… ஏ…
உன்னை தழுவிடலோ கண்ணம்மா…
உன்மத்தம் ஆகுதடி… ஏ…

ஆண் : உன் கண்ணில் நீர் வடிந்தால்…
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி…
உன் கண்ணில் நீர் வடிந்தால்…
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி…

ஆண் : என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா…
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா…
என்னுயிர் நின்னதன்றோ…


Notes : Chinnanchiru Kiliye Song Lyrics in Tamil. This Song from Manamagal (1951). Song Lyrics penned by Mahakavi Bharathiyar. சின்னஞ்சிறு கிளியே பாடல் வரிகள்.