பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கொத்தமங்கலம் சுப்பு | பி. லீலா & ஜிக்கி | சி.ராமச்சந்திரா & ஆர்.வைத்தியநாதன் | வஞ்சிக்கோட்டை வாலிபன் |
Kannum Kannum Kalandhu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஏனோ இன்பமே புதுமையாய் காண்பதே…
காதல் என்பது இதுதானோ…
இதுதானோ அறியேனே…
பெண் : கண்ணும் கண்ணும் கலந்து…
சொந்தம் கொண்டாடுதே…
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே…
பெண் : கண்ணும் கண்ணும் கலந்து…
சொந்தம் கொண்டாடுதே…
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே…
பெண் : கன்னி என்றேனடி கைகளை பிடித்தார்…
காதலி என்றென்னை கொஞ்சியே அழைத்தார்…
பெண் : கண்ணும் கண்ணும் கலந்து…
சொந்தம் கொண்டாடுதே…
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே…
—BGM—
ஆண் : சபாஷ் சரியான போட்டி…
—BGM—
பெண் : ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே…
ஜகத்தை மயக்கிடுவேனே…
கல கல கல கலவென்று ஜோராய்…
கையில் வளை பேசும் பாராய்…
பெண் : ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே…
ஜகத்தை மயக்கிடுவேனே…
கல கல கல கலவென்று ஜோராய்…
கையில் வளை பேசும் பாராய்…
—BGM—
பெண் : ஆடுவேன் பாரடி…
பாடுவேன் கேளடி…
ஆடுவேன் பாரடி…
இனி அனைவரும் மயங்கிட…
பெண் : ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே…
ஜகத்தை மயக்கிடுவேனே…
கல கல கல கலவென்று ஜோராய்…
கையில் வளை பேசும் பாராய்…
—BGM—
பெண் : ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்…
அன்பின் பாதையில் அணையிடலாமோ…
ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்…
அன்பின் பாதையில் அணையிடலாமோ…
பேதமையாலே மாதே இப்போதே…
காதலை வென்றிட கனவு காணாதே…
—BGM—
பெண் : சாதுர்யம் பேசாதேடி…
என் சலங்கைக்கு பதில் சொல்லடி…
சாதுர்யம் பேசாதேடி…
என் சலங்கைக்கு பதில் சொல்லடி…
பெண் : நடுவிலே வந்து நில்லடி…
நடையிலே சொல்லடி…
நடுவிலே வந்து நில்லடி…
நடையிலே சொல்லடி…
—BGM—
பெண் : ஆடும் மயில் எந்தன் முன்னே…
என்ன ஆணவத்தில் வந்தாயோடி…
பாடும் குயில் கீதத்திலே…
பொறாமை கொண்டு படமெடுத்து ஆடேதடி…
நீ படமெடுத்து ஆடேதடி…
—BGM—
பெண் : இன்னொருத்தி நிகராகுமோ…
எனக்கின்னொருத்தி நிகராகுமோ…
இடி இடித்தால் மழையாகுமோ…
பேதை பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ…
—BGM—
பெண் : மின்னலுக்கு அஞ்சேனடி…
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி…
இந்த மின்னலுக்கு அஞ்சேனடி…
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி…
—BGM—
Notes : Kannum Kannum Kalandhu Song Lyrics in Tamil. This Song from Vanji Kottai Valipan (1958). Song Lyrics penned by Kothamangalam Subbu. கண்ணும் கண்ணும் கலந்து பாடல் வரிகள்.