athana-per-mathiyila-song-lyrics-in-tamil

அத்தன பேர் மத்தியில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாயாசின் நிசார், வந்தனா ஸ்ரீனிவாசன்ஜஸ்டின் பிரபாகரன்இராவண கோட்டம்

Athana Per Mathiyila Song Lyrics in Tamil


பெண் : அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வச்ச பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…

பெண் : கத்தும் மாடு கத்தயிலே…
மத்து சத்தம் மத்தியிலே…
ஒத்த முத்தம் உள்ள வந்து குட்டி போட்டுறிச்சே…

பெண் : கனக்கா சிரிக்கிறேன்…
எதுக்கோ ரசிக்கிறேன்…
ஊத்தான ஊத்துல ஒயிலா நனஞ்சேன்…

பெண் : புதுசா பிறக்குறேன்…
படுத்தே பறக்குறேன்…
கண்ணாடிய கிள்ளி கிள்ளி கிறுக்கா முழிக்குறேன்…

ஆண் : அப்ப பாத்தது உன்ன…
கட்ட தாவணி புள்ள…
இப்ப பாக்குறேன் கண்ண…
ஏறுது ஏறுது பித்தம்…

ஆண் : கட்டிப்போடுது கண்ணு…
முட்டி போடுவது நெஞ்சு…
ஆச்சு வருஷங்கள் அஞ்சு…
சீறுது சீறுது நெஞ்சு…

ஆண் : எதையோ எதையோ செஞ்ச…
உள்ள ஆங்குது ஊங்குது…
இன்னும் தாங்குது தாங்குது நெஞ்சம்…

ஆண் : ஒருவாய் நெருப்ப ஓட்டிட்ட…
உள்ள தக தக தக…
தகக்குது சிலுக்குது…

ஆண் : வெகுநாள் வெறியே…
வெரசா அனையே…
கடவா உலகம் தொறந்துருச்சே…

ஆண் : பல நாள் திருடி…
உதட்ட திறடி…
என நான் தொலைச்சேன் எடுத்துக்கறேன்…

ஆண் : உதட்டான் குளத்துல…
பெரட்ட பிடிக்குறா…
சுழட்டி துவைக்குறா…
தலுக் மலுக் மலுக் மலுக்…

ஆண் : வறட்டி மனசுல…
மழையா விழுகுறா…
கலையா புழியுறா…
தாவணி காட்டுல வெள்ளம்…

பெண் : அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வச்ச பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…

BGM

பெண் : ஊரணி தண்ணியில…

ஆண் : மீனு ரெண்டு…

பெண் : மாலைய மாத்திக்குச்சு…

ஆண் : கிட்ட நின்னு…

பெண் : ஆசையா பெத்துகிட்டு…
சுத்தி சுத்தி வருது…

ஆண் : சேதிய கூறடி கூறடி…
காட்டுக்குள்ள தும்பி ரெண்டு…

பெண் : பின்னிகிட்டு…

ஆண் : வானம் ஒண்ணு கட்டிகிச்சு…

பெண் : பேச்சிகிட்டு…

ஆண் : ஊரு கண்ணா ஏச்சிப்புட்டு…
முத்தி முத்தி விழுதே…

பெண் : பாதைய மூடிடு மூடிடு…

ஆண் : தொலைவா நானும் கிடந்தேன்…
சிறு தவக்கள தீண்டாத…
விண்மீன போல…

ஆண் : உனக்குள் இப்போ கரஞ்சேன்…
ஆடி உதிரத்தில் ஓடும்…
தாய்ப்பாலின் ஈரம் போல…

ஆண் : அழகா அதட்டுறா…
மெதுவா வெறட்டுறா…
நிலவ பொறட்டுறா…
திடுக் திடுக் திடுக்குன்னு…

ஆண் : வெயிலா தொரத்துறறா…
வெறப்பா ரசிக்குறா…
இனிப்பா இனிக்குறா…
கலுக் கலுக் கலுக் கலுக்…

ஆண் : அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…

பெண் : கத்தும் மாடு கத்தயிலே…
மத்து சத்தம் மதியிலே…
ஒத்த முத்தம் உள்ள வந்து குட்டி போட்டுறிச்சே…

BGM

ஆண் : நாக்குல சொட்டுது…

பெண் : மௌனம் ஒன்னு…

ஆண் : பார்வையும் நிக்குது…

பெண் : வேணுமின்னு…

ஆண் : ஆசையும் முத்தத்துல…
பொத்தி வச்சு தார…

பெண் : வாங்கிடு வாங்கிடு வந்து…
வீட்டுக்குள்ள சுத்துது…

ஆண் : வெளிச்சம் ஒன்னு…

பெண் : வாசலில கத்துது…

ஆண் : மனசு நின்னு…

பெண் : ஊரு கண்ண பூட்டிப்புட்டு…
ரெண்டும் ரெக்கையில…

ஆண் : தாண்டுது தாண்டுது சென்று…

ஆண் : கொடுவா மேல பனியா…
இவ திடுக்குனு பாக்குற பார்வையே போதும்…
உனக்காக நானும் இறப்பேன்…
அடி புதைக்குற நேரம் முடியாத முத்தம்தாடி…

ஆண் : கதவோ திறக்குதே…
திறந்து…
மனசோ பறக்குதே…
பறந்து…
முழுசா பிறக்குதே…

ஆண் & பெண் : அதுவா நடக்குதே…
நடக்க எதுவோ இயக்குதே…
இயக்க பொதுவா நிலைக்குதே…

ஆண் & பெண் : காதலும் சாமியும் ஒன்னு…


Notes : Athana Per Mathiyila Song Lyrics in Tamil. This Song from Raavana Kottam (2023). Song Lyrics penned by Karthik Netha. அத்தன பேர் மத்தியில பாடல் வரிகள்.