aanandha-yaazhai-song-lyrics

ஆனந்த யாழை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரீராம் பார்த்தசாரதியுவன் ஷங்கர் ராஜாதங்கமீன்கள்

Aanandha Yaazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்…
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…

ஆண் : இரு நெஞ்சம் இணைந்து பேசிட…
உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை…
சிறு புல்லில் உறங்கும் பனியில்…
தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை…

ஆண் : உந்தன் கைகள் பிடித்து போகும் வழி…
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி…
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே…
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்…
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…

BGM

ஆண் : தூரத்து மரங்கள் பார்க்குதடி…
தேவதை இவளா கேக்குதடி…
தன்னிலை மறந்தா பூக்குதடி…
காற்றினில் வாசம் தூக்குதடி…

ஆண் : அடி கோவில் எதற்கு…
தெய்வங்கள் எதற்கு…
உனது புன்னகை போதுமடி…
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே…
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…

BGM

ஆண் : உன் முகம் பார்த்தால் தோணுதடி…
வானத்து நிலவு சின்னதடி…
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி…
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி…
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து…
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி…

ஆண் : இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே…
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…

ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…


Notes : Aanandha Yaazhai Song Lyrics in Tamil. This Song from Thangameenkal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. ஆனந்த யாழை பாடல் வரிகள்.