yaar-antha-oviyaththai-song-lyrics

யார் அந்த ஓவியத்தை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் யேசுதாஸ் & நிவாஸ்யுவன் ஷங்கர் ராஜாகளத்தில் சந்திப்போம்

Yaar Antha Oviyaththai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யார் அந்த ஓவியத்தை…
நடமாட வைத்ததோ…
உன் வீட்டில் மாட்டி வைக்க கால நேரம் வந்ததோ…

ஆண் : கண்ணாடி மாளிகையே…
கண் வைத்து பார்த்ததோ…
முன்னே அவள் நின்ற போது கண்கள் கூசி போனதோ…

ஆண் : உலக அழகி இல்லை…
உலவும் நிலவும் இல்லை…
பழக தோழியா தெரியிறா…

ஆண் : அதிர சிரிப்பும் இல்லை…
அதிக சிவப்பும் இல்லை…
அழகின் ஓவியமா அசத்துறா…

ஆண் : கவிதை போல வந்து…
கனவு போல வந்து…
உனக்கு அப்படியே பொருந்துறா…
உனக்குன்னு இருக்குறா உள்ளூர் எல்லோரா…

ஆண் : அவதான் உன் மாமன் பொண்ணு…
அயில மீன் கண்ணே கண்ணு…
உனக்கான ஜோடியின்னு…
நான் பார்த்து அசந்த பொண்ணு…

ஆண் : என்னன்னு நான் சொல்ல…
அழகுனா அத்தனை அழகு…
அன்றாடம் நீ மெல்ல…
ஐ லவ் யூ சொல்லி பழகு…

—BGM—

ஆண் : நான் பார்த்த தேவதைக்கு…
சிறகில்லை உண்மையில்…
அவள் போல பெண்ணை நானும் பார்த்ததில்லை அண்மையில்…

ஆண் : தரை மேலே நின்ற போதும்…
மிதக்கின்றாள் மென்மையில்…
தங்கத்தை ஊற்றி ஊற்றி வார்த்து வைத்த பொன்மயில்…

ஆண் : லட்சம் பூ பறிச்சு…
மிச்சம் தேன் தெளிச்சு…
வச்ச அழகு அவ அழகடா…

ஆண் : அச்ச பார்வையில…
உச்சம் கவிதை ஒன்னு…
அச்சில் எட்டி விடும் அடடடா…

ஆண் : கச்ச தீவுக்கொரு…
மச்சம் வச்சது போல்…
பச்சை பசுமை அவ பாரடா…
அழகடா அவளடா அசந்து போலாம்டா…

ஆண் : அவள் கண்கள் கவிதை பக்கம்…
அதில் கண்டேன் வெள்ளை வெக்கம்…
அவள் வந்து முன்னே நின்றால்…
நிலவெல்லாம் பின்னே நிற்கும்…

ஆண் : மொத்தத்தில் அவள் போல…
பெண் இந்த ஊருக்குள் இல்லை…
பக்கத்தில் அவள் வந்தா…
பறந்திடுவாய் வானில் மெல்ல…

—BGM—

ஆண் : கண்ணாடி சிலையை போல…
முன்னாடி சிரிச்சு போறா…
ஆத்தாடி உன் மனச…
அங்காடி ஆக்க போறா…

ஆண் : மொத்தத்தில் அவள் போல…
பெண் இந்த ஊருக்குள் இல்லை…
பக்கத்தில் அவள் வந்தா…
பறந்திடுவாய் வானில் மெல்ல…

—BGM—


Notes : Yaar Antha Oviyaththai Song Lyrics in Tamil. This Song from Kalathil Santhippom (2021). Song Lyrics penned by Pa Vijay. யார் அந்த ஓவியத்தை பாடல் வரிகள்.