பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | விஜய் யேசுதாஸ் & நிவாஸ் | யுவன் ஷங்கர் ராஜா | களத்தில் சந்திப்போம் |
Yaar Antha Oviyaththai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : யார் அந்த ஓவியத்தை…
நடமாட வைத்ததோ…
உன் வீட்டில் மாட்டி வைக்க கால நேரம் வந்ததோ…
ஆண் : கண்ணாடி மாளிகையே…
கண் வைத்து பார்த்ததோ…
முன்னே அவள் நின்ற போது கண்கள் கூசி போனதோ…
ஆண் : உலக அழகி இல்லை…
உலவும் நிலவும் இல்லை…
பழக தோழியா தெரியிறா…
ஆண் : அதிர சிரிப்பும் இல்லை…
அதிக சிவப்பும் இல்லை…
அழகின் ஓவியமா அசத்துறா…
ஆண் : கவிதை போல வந்து…
கனவு போல வந்து…
உனக்கு அப்படியே பொருந்துறா…
உனக்குன்னு இருக்குறா உள்ளூர் எல்லோரா…
ஆண் : அவதான் உன் மாமன் பொண்ணு…
அயில மீன் கண்ணே கண்ணு…
உனக்கான ஜோடியின்னு…
நான் பார்த்து அசந்த பொண்ணு…
ஆண் : என்னன்னு நான் சொல்ல…
அழகுனா அத்தனை அழகு…
அன்றாடம் நீ மெல்ல…
ஐ லவ் யூ சொல்லி பழகு…
—BGM—
ஆண் : நான் பார்த்த தேவதைக்கு…
சிறகில்லை உண்மையில்…
அவள் போல பெண்ணை நானும் பார்த்ததில்லை அண்மையில்…
ஆண் : தரை மேலே நின்ற போதும்…
மிதக்கின்றாள் மென்மையில்…
தங்கத்தை ஊற்றி ஊற்றி வார்த்து வைத்த பொன்மயில்…
ஆண் : லட்சம் பூ பறிச்சு…
மிச்சம் தேன் தெளிச்சு…
வச்ச அழகு அவ அழகடா…
ஆண் : அச்ச பார்வையில…
உச்சம் கவிதை ஒன்னு…
அச்சில் எட்டி விடும் அடடடா…
ஆண் : கச்ச தீவுக்கொரு…
மச்சம் வச்சது போல்…
பச்சை பசுமை அவ பாரடா…
அழகடா அவளடா அசந்து போலாம்டா…
ஆண் : அவள் கண்கள் கவிதை பக்கம்…
அதில் கண்டேன் வெள்ளை வெக்கம்…
அவள் வந்து முன்னே நின்றால்…
நிலவெல்லாம் பின்னே நிற்கும்…
ஆண் : மொத்தத்தில் அவள் போல…
பெண் இந்த ஊருக்குள் இல்லை…
பக்கத்தில் அவள் வந்தா…
பறந்திடுவாய் வானில் மெல்ல…
—BGM—
ஆண் : கண்ணாடி சிலையை போல…
முன்னாடி சிரிச்சு போறா…
ஆத்தாடி உன் மனச…
அங்காடி ஆக்க போறா…
ஆண் : மொத்தத்தில் அவள் போல…
பெண் இந்த ஊருக்குள் இல்லை…
பக்கத்தில் அவள் வந்தா…
பறந்திடுவாய் வானில் மெல்ல…
—BGM—
Notes : Yaar Antha Oviyaththai Song Lyrics in Tamil. This Song from Kalathil Santhippom (2021). Song Lyrics penned by Pa Vijay. யார் அந்த ஓவியத்தை பாடல் வரிகள்.