Vaigai Karai Katre Song Lyrics in Tamil

வைகைக் கரை காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்கே.ஜே. யேசுதாஸ்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Vaigai Karai Katre Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…

ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கை தனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…

ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கை தனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை…
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை…
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை…
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை…

ஆண் : காதலில் வாழ்ந்த கன்னி மனம்…
காவலில் வாடையில் கண்ணிவிடும்…

ஆண் : கூண்டுக்குள்ளே அலைமோதும்…
காதல் கிளி அவள் பாவம்…
கூண்டுக்குள்ளே அலைமோதும்…
காதல் கிளி அவள் பாவம்…
காதல் கிளி அவள் பாவம்…

ஆண் : காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே…
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே…
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே…
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே…

ஆண் : நிலவினை மேகம் வானில் மறைக்க…
அவளினை யாரோ வீட்டில் தடுக்க…
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ…
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ…
சோகமது நீங்காதோ…

ஆண் : காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…

ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கைதனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

ஆண் : நீ காதோரம் போய் சொல்லு…
நீ காதோரம் போய் சொல்லு…


Notes : Vaigai Karai Katre Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. வைகைக் கரை காற்றே பாடல் வரிகள்.