பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | மனோ & ரஞ்சனி | கீதபிரியன் | மன்னவரு சின்னவரு |
Vaan Nilave Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வான் நிலாவே வான் நிலாவே…
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி…
கால காலம் காதல் வாழும்…
நீல வான் மதி நீ இதன் சாட்சி…
ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே…
குடியேறினால் கலைவானியே…
இந்த வீட்டினில் இருவரும்…
ஒன்றாகும் திருநாள்தான் இது…
ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே…
குடியேறினால் கலைவானியே…
ஆண் : வான் நிலாவே வான் நிலாவே…
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி…
கால காலம் காதல் வாழும்…
நீல வான் மதி நீ இதன் சாட்சி…
ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே…
குடியேறினால் கலைவானியே…
—BGM—
ஆண் : உயிரினை உனக்கொரு உயிலென நான்…
வரைந்தேனே வைரமணி…
எனக்கென எது இங்கு கிடையாது…
எல்லாமே நீ இனி…
பெண் : ஒருவரில் ஒருவர் கலந்த பின்னே…
இனி இங்கே இரண்டு இல்லையே…
நிழல் என இருட்டிலும் வருவேனே…
நீ வாழும் எல்லையே…
ஆண் : எனை தந்து நான் உனை வாங்கினேன்…
உன்னை வாங்கி என் மடி தாங்கினேன்…
பெண் : தினம் மாலையிலே பூ மாலையை போல்…
நான் உன் மார்பிலே…
ஆண் : வான் நிலாவே வான் நிலாவே…
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி…
பெண் : கால காலம் காதல் வாழும்…
நீல வான் மதி நீ இதன் சாட்சி…
ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே…
பெண் : ஓஓ… குடியேறினால் கலைவானியே…
—BGM—
பெண் : ஒருமுறை இருவரும் உரசிடவே…
உருவாகும் தீப்பொறியே…
தலை முதல் கால் வரை தவித்தாயே…
தாங்காது பூவையே…
—BGM—
ஆண் : சிறு சிறு சிறு சிறு மலர்களிலே…
பனி தூங்கும் நேரமிது…
சிலு சிலு சிலு சிலு காதற்று வந்து…
சிந்தொன்று பாடுது…
பெண் : மனம் எங்கிலும் மழை தூறல்கள்…
நினைவெங்கிலும் மழை சாரல்கள்…
ஆண் : சற்று சாய்ந்திருக்க நீ பாய் போடு…
உன் பூ கூந்தலில்…
பெண் : வான் நிலாவே வான் நிலாவே…
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி…
கால காலம் காதல் வாழும்…
நீல வான் மதி நீ இதன் சாட்சி…
பெண் : மகாலட்சுமியின் மனை தேடியே…
குடியேறினால் கலைவானியே…
ஆண் : இந்த வீட்டினில் இருவரும்…
ஒன்றாகும் திருநாள்தான் இது…
பெண் : மகாலட்சுமியின் மனை தேடியே…
குடியேறினால் கலைவானியே…
Notes : Vaan Nilave Song Lyrics in Tamil. This Song from Mannavaru Chinnavaru (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. வான் நிலாவே பாடல் வரிகள்.