பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். ஜானகி & கே.ஜே. யேசுதாஸ் | இளையராஜா | ஈரமான ரோஜாவே |
Vaa Vaa Anbe Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு…
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு…
பெண் : பறவை அழைத்தது…
அதற்கொரு துணையும் கிடைத்தது…
சிறகை விரித்தது…
வலம் வரத்தான்…
ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு…
வா வா அன்பே…
—BGM—
ஆண் : மாலை நேர சூரியன்…
மேற்கிலிருந்து பார்க்கிறான்…
வேலி ஓர பூக்களின்…
வசந்த கீதம் கேட்கிறான்…
பெண் : அந்தி வெயில் வேலைதான்…
ஆசை பூக்கும் நேரம்…
புல்லின் மீது வாடைதான்…
பனியை மெல்ல தூவும்…
ஆண் : போதும் போதும்…
தீர்ந்தது வேதனை…
பெண் : வண்ண மானும்தான்…
சேர்ந்தது நாதனை
ஆண் : விரலை கண்டதும்…
மீட்ட சொன்னது வீணை…
பெண் : வா வா அன்பே பூஜை உண்டு…
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு…
ஆண் : பறவை அழைத்தது…
அதற்கொரு துணையும் கிடைத்தது…
சிறகை விரித்தது…
வலம் வரத்தான்…
பெண் : வா வா அன்பே பூஜை உண்டு…
வா வா அன்பே…
—BGM—
பெண் : நீலம் பூத்த பார்வைகள்…
நூறு கடிதம் போட்டது…
நீயும் நானும் சேர்ந்திட…
நேரம் பொழுது கேட்டது…
ஆண் : மலரை வண்டு மொய்த்திட…
மாதம் தேதி ஏது…
மீன மேஷம் பார்ப்பதோ…
காதல் தோன்றும்போது…
பெண் : காலை மாலை…
ஏங்கினேன் ஏங்கினேன்…
ஆண் : கையில் நான் உன்னை…
வாங்கினேன் வாங்கினேன்…
பெண் : நீயும் நீயல்ல…
நானும் நானல்ல… கண்ணா…
ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு…
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பெண் : பறவை அழைத்தது…
அதற்கொரு துணையும் கிடைத்தது…
சிறகை விரித்தது…
வலம் வரத்தான்…
ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு…
வா வா அன்பே…
Notes : Vaa Vaa Anbe Song Lyrics in Tamil. This Song from Eeramaana Rojavae (1991). Song Lyrics penned by Vaali. வா வா அன்பே பாடல் வரிகள்.