பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
எம்.ஜி.வல்லபன் | கே.ஜே. யேசுதாஸ் & வாணி ஜெயராம் | இளையராஜா | உன்னை நான் சந்தித்தேன் |
Unnai Kaanum Song Lyrics in Tamil
ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்…
ராகம் பல நூறு பாடும் தினம்தோறும்…
காலம் நேரம் ஏதுமில்லை…
ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்…
—BGM—
பெண் : கண்ணில் மின்னும் காதல் ஜோதி…
கன்னி மேனி மானின் ஜாதி…
ஆண் : கண்கள் சொல்லும் காமன் சேதி…
கண்டும் என்ன நாணம் மீதி…
பெண் : ஒரு மாலை தோளில் சேரும்…
திருநாளில் நாணம் தீரும்…
ஒரு மாலை தோளில் சேரும்…
திருநாளில் நாணம் தீரும்…
ஆண் : தொட வேண்டி கைகள் ஏங்கும்…
படவேண்டும் பார்வை எங்கும்…
பெண் : இந்த பார்வை ஒன்று போதும்…
போதும் இடைவேளை மீதி இனி நாளை…
ஆண் : மாலை வேளை வீணாய் போகும்…
இந்த பார்வை ஒன்று போதும்…
—BGM—
ஆண் : கண்ணால் உன்னைக் கண்டால் போதும்…
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்…
பெண் : மன்னா உன்னை மார்பில் தாங்கும்…
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்…
ஆண் : மடி மீது சாயும் சாபம்…
தரவேண்டும் ஆயுள் காலம்…
மடி மீது சாயும் சாபம்…
தரவேண்டும் ஆயுள் காலம்…
பெண் : பலகோடி காலம் வாழ…
பனி தூவி வானம் வாழ்த்தும்…
ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்…
பெண் : ராகம் பல நூறு…
ஆண் : பாடும் தினம்தோறும்…
பெண் : காலம் நேரம் ஏதுமில்லை…
ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்…
Notes : Unnai Kaanum Song Lyrics in Tamil. This Song from Unnai Naan Santhithen (1984). Song Lyrics penned by M.G. Vallaban. உன்னைக் காணும் பாடல் வரிகள்.