விழியிலே மணி விழியில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநூறாவது நாள்

Vizhiyile Mani Song Lyrics in Tamil


ஆண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்…
பெண் : ம்ம்ம்… ம்ம்ம்…
ஆண் : உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்…

BGM

ஆண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்…
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்…

பெண் : ஓஓஓ… அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்…
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்…

பெண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்…

BGM

ஆண் : கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது…
கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது…

ஆண் : இவள் ரதியினம் உடல் மலர்வனம்…
இதழ் மரகதம் அதில் மதுரசம்…
இவள் காமன் வாகனம்…
இசை சிந்தும் மோகனம்…
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே…

பெண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்…
ஆண் : பா பா பா பா…
பெண் : லா லா லா லா…

BGM

பெண் : காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி…
காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி…
இன்பச் சுகவரி அன்பின் முகவரி…
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி…

பெண் : மழலை அன்னம் மாதிரி…
மடியில் தூங்க ஆதரி…
விடிய விடிய என் பேரை உச்சரி…

பெண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்…
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்…

ஆண் : ஓஓஓ… அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்…
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்…

ஆண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்…


Notes : Vizhiyile Mani Song Lyrics in Tamil. This Song from Nooravathu Naal (1984). Song Lyrics penned by Pulamaipithan. விழியிலே மணி விழியில் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top