unakena-irupen-song-lyrics-in-tamil

உனக்கென இருப்பேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜோஷ்வா ஸ்ரீதர்காதல்

Unakena Irupen Song Lyrics in Tamil


ஆண் : உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்…

ஆண் : கண்மணியே… கண்மணியே…
அழுவதேன்… கண்மணியே…
வழித்துணை நான் இருக்க…

ஆண் : உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்…

BGM

ஆண் : கண்ணிர் துளிகளை…
கண்கள் தாங்கும்…
கண்மணி காதலின்…
நெஞ்சம்தான் தாங்கிடுமா…

ஆண் : கல்லறை மீதுதான்…
பூத்த பூக்கள்…
என்றுதான் வண்ணத்து…
பூச்சிகள் பார்த்திடுமா…

ஆண் : மின்சார கம்பிகள் மீது…
மைனாக்கள் கூடுகட்டும்…
நம் காதல் தடைகளை தாண்டும்…

ஆண் : வளையாமல் நதிகள் இல்லை…
வலிக்காமல் வாழ்க்கை இல்லை…
வருங்காலம் காயம் ஆற்றும்…

ஆண் : நிலவொளியை மட்டும் நம்பி…
இலை எல்லாம் வாழ்வதில்லை…
மின்மினியும் ஒளிகொடுக்கும்…

BGM

ஆண் : தந்தையும் தாயயும்…
தாண்டி வந்தாய்…
தோழியே இரண்டுமாய்…
என்றுமே நான் இருப்பேன்…

ஆண் : தோளிலே நீயுமே சாயும்போது…
எதிர்வரும் துயரங்கள்…
அனைத்தையும் நான் எதிா்ப்பேன்…

ஆண் : வெந்நீரில் நீ குளிக்க…
விறகாகி தீ குளிப்பேன்…
உதிரத்தில் உன்னை கலப்பேன்…

ஆண் : விழிமூடும் போதும் உன்னை…
பிரியாமல் நான் இருப்பேன்…
கனவுக்குள் காவல் இருப்பேன்…

ஆண் : நான் என்றால் நானே இல்லை…
நீதானே நானாய் ஆனேன்…
நீ அழுதால் நான் துடிப்பேன்…

ஆண் : உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்…

ஆண் : கண்மணியே… கண்மணியே…
அழுவதேன்… கண்மணியே…
வழித்துணை நான் இருக்க…


Notes : Unakena Irupen Song Lyrics in Tamil. This Song from Kaadhal (2004). Song Lyrics penned by Na. Muthukumar. உனக்கென இருப்பேன் பாடல் வரிகள்.