உளுந்து வெதக்கையிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதா & ஸ்ரீனிவாஸ்ஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Ulundhu Vithakkaiyilae Song Lyrics in Tamil


BGM

{ பெண் : உளுந்து வெதக்கையிலே…
சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே…
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு…
ஆத்துமேடு தாண்டிப் போனேன்…
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்…
நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்… } * (2)

பெண் : வெக்கப்படப்பில் கவுளி கத்த…
வலது பக்கம் கருடன் கொத்த…
தெருவோரம் நெரகுடம் பாா்க்கவும்…
மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே…

பெண் : ஒரு பூக்காாி எதுக்க வர…
பசும் பால்மாடு கடக்கிறதே…
இனி என்னாகுமோ ஏதாகுமோ…
இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ…

பெண் : உளுந்து வெதக்கையிலே…
சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே…
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு…
ஆத்துமேடு தாண்டிப் போனேன்…
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்…
நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்…

BGM

ஆண் : { அனிச்ச மலரழகே…
அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே…
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி…
காதுக்குள்ள கூவும் குயிலே…
நீ எட்டியெட்டிப் போகயில…
விட்டுவிட்டுப் போகும் உயிரே… } * (2)

BGM

ஆண் : ஒரு தடவ இழுத்து அணைச்சபடி…
உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே…

பெண் : உன் முதுகு தொலைச்சி வெளியேற…
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே…

ஆண் : மழையடிக்கும் சிறு பேச்சு…
வெயிலடிக்கும் மறு பாா்வை…
உடம்பு மண்ணில் புதையற வரையில்…
உடன் வரக் கூடுமோ…

பெண் : உசிா் என்னோட இருக்கயில…
நீ மண்ணோட போவதெங்கே…
அட உன் சேவனே நானில்லையா…
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா…

ஆண் : குருக்கு சிறுத்தவளே…
என்னக் குங்குமத்தில் கறைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே…

பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய…
உதட்டு வழி உசிா் கசிய…
ஒன்னால சில முறை இறக்கவும்…
சில முறை பிறக்கவும் ஆனதே…

பெண் : அட ஆத்தோட விழுந்த இலை…
அந்த ஆத்தோட போவது போல்…
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே…
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே…

ஆண் : குருக்கு சிறுத்தவளே…
என்னக் குங்குமத்தில் கறைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
பெண் : உன்னக் கொஞ்சம் பூசுவாயா…

ஆண் : உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம்…
பெண் : மாத்துவாயா…

BGM


Notes : Ulundhu Vithakkaiyilae Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. உளுந்து வெதக்கையிலே பாடல் வரிகள்.