| பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | சுவர்ணலதா | வித்யாசாகர் | பூவெல்லாம் உன் வாசம் |
Thirumana Malargal Song Lyrics in Tamil
—BGM—
பெண் : திருமண மலர்கள் தருவாயா…
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே…
தினம் ஒரு கனியை தருவாயா…
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே…
பெண் : மலர்வாய் மலர்வாய் கொடியே…
கனிவாய் கனிவாய் மரமே…
நதியும் கரையும் அருகே…
நானும் அவனும் அருகே…
பெண் : பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை…
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை…
—BGM—
பெண் : திருமண மலர்கள் தருவாயா…
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே…
தினம் ஒரு கனியை தருவாயா…
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே…
—BGM—
பெண் : தாலி கொள்ளும் பெண்கள்…
தாயை நீங்கும் போது…
கண்ணோடு குற்றாலம் பாய்வதுண்டு…
—BGM—
பெண் : மாடி கொண்ட ஊஞ்சல்…
மடிமேல் கொஞ்சும் பூனை…
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு…
பெண் : அந்த நிலை இங்கே இல்லை…
அனுப்பி வைக்க வழியே இல்லை…
அழுவதற்கு வாய்ப்பே இல்லை…
அதுதான் தொல்லை…
பெண் : போனவுடன் கடிதம் போடு…
புதினாவும் கீரையும் சேரு…
புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை…
ஏன் என்றால் சுவர்தான் உண்டு தூரம் இல்லை…
பெண் : இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா…
வீட்டுக்குள்ளே விண்மீன்கள் காய்த்திடுமா…
பெண் : திருமண மலர்கள் தருவாயா…
—BGM—
பெண் : தினம் ஒரு கனியை தருவாயா…
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே…
—BGM—
பெண் : கன்னம் கிள்ளும் மாமி…
காதை திருகும் மாமா…
என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு…
பெண் : மாதம் பத்து செல்ல…
மழலை பெற்றுக்கொள்ள…
அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு…
பெண் : பாவாடை அவிழும் வயதில்…
கைறு கட்டிவிட்டவன் எவனோ…
தாலி கட்ட வந்தவன் அவனே…
உறவானவன்…
பெண் : கொழுசு இடும் ஓசை கேட்டே…
மனசில் உள்ள பாஷை சொல்வான்…
மழை நின்ற மலரை போல பதமானவன்…
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்…
பெண் : தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே…
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே…
பெண் : திருமண மலர்கள் தருவாயா…
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே…
தினம் ஒரு கனியை தருவாயா…
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே…
பெண் : மலர்வாய் மலர்வாய் கொடியே…
கனிவாய் கனிவாய் மரமே…
நதியும் கரையும் அருகே…
நானும் அவனும் அருகே…
பெண் : பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை…
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை…
—BGM—
Notes : Thirumana Malargal Song Lyrics in Tamil. This Song from Poovellam Un Vasam (2001). Song Lyrics penned by Vairamuthu. திருமண மலர்கள் பாடல் வரிகள்.


