பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
அண்ணாமலை | சுப்ரியா ஜோஷி | விஜய் ஆண்டனி | பிச்சைக்காரன் |
Nenjorathil Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நெஞ்சோரத்தில்… என் நெஞ்சோரத்தில்…
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்… ஓஓ…
கடிகாரத்தில் துளிநொடி நேரத்தில்…
எந்தன் உயிரோடு கலந்துவிட்டாய்… ஓஓ…
பெண் : எனக்கு என்னானது…
மனம் தடுமாறுது…
விழி உனைத் தேடித்தான் ஓடுது…
தேடுது… ஓஓ…
பெண் : நெஞ்சோரத்தில்…
என் நெஞ்சோரத்தில்…
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்… ஓஓ…
—BGM—
பெண் : என் காலடி மண்ணில் பதிந்தாலும்…
நான் நூறடி உயரம் மிதக்கிறேன்…
நீ ஓரடி தூரம் பிாிந்தாலும்…
என் உயிாில் வலியை உணா்கிறேன்…
பெண் : புது கொள்ளைக்காரன் நீயோ…
என் நெஞ்சைக் காணவில்லை…
நான் உன்னைக்கண்ட பின்னால்…
என் கண்கள் தூங்கவில்லை…
பெண் : இடைவெளி குறைந்து இருவரும் இருக்க…
ஒரு துளி மழையில் இருவரும் குளிக்க…
ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை…
என்னை மயக்கிவிட்டாயே…
பெண் : நெஞ்சோரத்தில்…
என் நெஞ்சோரத்தில்…
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்… ஓஓ…
—BGM—
பெண் : உன் கைகள் தொட்ட இடம் பாா்த்து…
நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன்…
சிறு காகிதம் கையில் கிடைத்தாலும்…
உன் பெயரை எழுதி ரசிக்கிறேன்…
பெண் : உன் கண்ணை உற்றுப் பாா்த்தால்…
லட்சம் வாா்த்தை சொல்லும்…
அதில் ஏதோ ஒன்று என்னை…
எங்கோ தூக்கிச் செல்லும்…
பெண் : ஒரு குடை பிடித்து இருவரும் நடக்க…
விரல் நுனி உரசி வீதியைக் கடக்க…
ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை…
என்னை மயக்கிவிட்டாயே…
பெண் : நெஞ்சோரத்தில்…
என் நெஞ்சோரத்தில்…
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்… ஓஓ…
பெண் : எனக்கு என்னானது…
மனம் தடுமாறுது…
விழி உனைத் தேடித்தான் ஓடுது…
தேடுது… ஓஓ…
பெண் : நெஞ்சோரத்தில்…
Notes : Nenjorathil Song Lyrics in Tamil. This Song from Pichaikkaran (2016). Song Lyrics penned by Annamalai. நெஞ்சோரத்தில் பாடல் வரிகள்.