தென்றலைக் கண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன் & இளையராஜாஇளையராஜாநிலவே முகம் காட்டு

Thendralai Kandukolla Song Lyrics in Tamil


ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…

BGM

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…

ஆண் : நெஞ்சின் வண்ணங்களை…
ஓடும் எண்ணங்களை…
காண கண் வேண்டுமா பேச சொல் வேண்டுமா…
மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…

BGM

ஆண் : உன்னைப் பார்த்தொரு குயில் கூவுதே…
அந்த காதல் தேன் குரல் கேட்டாயோ…

BGM

ஆண் : உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே…
ஈர காற்று காதல் சொல்லக் கண்டாயா…

BGM

ஆண் : உன்னை நான் எண்ணுகின்ற நேரம்…
உள்ளுக்குள் மார்கழி மாதம்…
அன்பே நான் உன்னைக் காணும் நேரம்…
கண்ணுக்குள் கார்த்திகை தீபம்…

ஆண் : கண்கள் இன்றி என்னைக் கண்டுகொள்வாய்…
என்று நீ என் காதல் கண்டுகொள்வாய்…
அந்த நாள் எந்த நாள் என்று நீ சொல்லு…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…

BGM

ஆண் : சோலை பூவனம் தேடும் பூவினம்…
எந்தன் நெஞ்சில் பூப்பறிக்க வந்தாளோ…

BGM

ஆண் : அந்த வெண்ணிலா தேடும் பெண்ணிலா…
எந்தன் நெஞ்சை வானம் என்று கொண்டாளோ…

BGM

ஆண் : ஹோ… சந்தன சந்திரனின் பாட்டு…
சந்தங்கள் சொன்னதடி நேற்று…
சொல்லாத ஏக்கங்களைச் சேர்த்து…
நீதானே என்னைத் தொட்ட காற்று…

ஆண் : அதிகாலை மாலை இரவென்ன…
அதன் துன்பம் இன்பம் தந்ததென்ன…
என்று மௌனத்தின் வாசலைத் திறப்பாய்…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…

ஆண் : நெஞ்சின் வண்ணங்களை…
ஓடும் எண்ணங்களை…
காண கண் வேண்டுமா பேச சொல் வேண்டுமா…
மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே…

ஆண் : தென்றலைக் கண்டு கொள்ள மானே…
கண்களின் தேவை என்ன தேனே…
உள்ளத்தில் பார்வை உண்டு மானே…
உண்மைகள் கண்டு சொல்லும் தேனே…


Notes : Thendralai Kandukolla Song Lyrics in Tamil. This Song from Nilave Mugam Kaattu (1999). Song Lyrics penned by Vasan. தென்றலைக் கண்டு பாடல் வரிகள்.