தவழ்ந்திடும் தங்கபூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அரவிபாம்பே ஜெயஸ்ரீடி. இமான்வீர சிவாஜி

Thavazhnthidum Thangapoove Song Lyrics in Tamil


BGM

பெண் : தவழ்ந்திடும் தங்கபூவே…
தலை அசைக்கும் வெண்ணிலாவே…
மந்திர புன்னகைகள் உன்னில் தாராளம்…

பெண் : கருவறை வாசல் தாண்டி…
கைகளிலே வந்து சேர்ந்தாய்…
கதைகள் உன்னிடத்தில் சொல்ல ஏராளம்…

பெண் : மடியினில் என்னை சாய்ப்பேனே…
மார்பினில் உன்னை சுமப்பேனே…
உனதிரு விழிகளிலே எந்தன் கனவுகள்…
எனதுயிர் நீயின்றி இல்லை விடியல்கள்…

பெண் : தவழ்ந்திடும் தங்க பூவே…
தலை அசைக்கும் வெண்ணிலாவே…
மந்திர புன்னகைகள் உன்னில் தாராளம்…

பெண் : கருவறை வாசல் தாண்டி…
கைகளிலே வந்து சேர்ந்தாய்…
கதைகள் உன்னிடத்தில் சொல்ல ஏராளம்…

BGM

பெண் : சில நேரம் கோவம் கொள்வாய்…
சிரித்தே பின் மாயம் செய்வாய்…
சிறு சிறு குறும்புகளாலே என்னை நீ வெல்வாயே…
அழகாய் எந்தன் தோளில் தூலிதான் நெய்வாயே…

பெண் : இமை சொல்லும் மொழியாவும் இனிமை கேட்பேன்…
இவள் கரம் பிடித்தே தான் உலகை ரசிப்பேன்…

பெண் : யாழ் இசைக்கும் உன் பேச்சு தாலாட்டு எனக்கு…
யாழினியே உன் மடியே அன்னை மடி எனக்கு…

பெண் : தவழ்ந்திடும் தங்க பூவே…
தலை அசைக்கும் வெண்ணிலாவே…
மந்திர புன்னகைகள் உன்னில் தாராளம்…

BGM

பெண் : அநியாய சேட்டை செய்வாய்…
அயர்ந்தே பின் தூக்கம் கொள்வாய்…
வரம் தரும் தேவதை நீயே வரமாய் வந்தாயே…
நிரமற்ற தூரிகை நானே வா்ணங்கள் தந்தாயே…

பெண் : எந்தன் மரணத்தின் நேரம் நெருங்கும்போதும்…
உந்தன் மலர் முகம் கண்டால் ஜனனம் மீண்டும்…

பெண் : விழிகளில் ஈரங்கள் நீராட்டிப் போகும்…
இவளன்றி என் நாட்கள் தனிமையில் சாகும்…

பெண் : தவழ்ந்திடும் தங்க பூவே…
தலை அசைக்கும் வெண்ணிலாவே…
மந்திர புன்னகைகள் உன்னில் தாராளம்…

பெண் : மடியினில் என்னை சாய்ப்பேனே…
மார்பினில் உன்னை சுமப்பேனே…

பெண் : உனதிரு விழிகளிலே எந்தன் கனவுகள்…
எனதுயிர் நீயின்றி இல்லை விடியல்கள்…


Notes : Thavazhnthidum Thangapoove Song Lyrics in Tamil. This Song from Veera Sivaji (2016). Song Lyrics penned by Aravi. தவழ்ந்திடும் தங்கபூவே பாடல் வரிகள்.