பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேகா | சுசித்ரா | எஸ்.எஸ். தமன் | ஈரம் |
Tharai Erangiya Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தரை இறங்கிய பறவை போலவே…
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே…
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே…
என்னுயிா் தனியே ஒதுங்குகிறதே…
பெண் : தொடத்தொடதொட தொலைந்து போகிறேன்…
எடை எடை மிகக்குறைந்து போகிறேன்…
அட இது என்ன உடைந்து சோ்கிறேன்…
நகத்தின் நுனியில் சிலிா்த்து விடக்கண்டேன்…
ஆண் : ஓ மாயா ஓ மாயா…
நீ இல்லாமல் நான் இல்லை மாயா…
ஓ மாயா ஓ மாயா…
நீ இல்லாமல் நான் இல்லை மாயா…
பெண் : நதியில் மிதக்கும் ஓடம் என…
வானில் அலையும் மேகம் என…
மாறத்துடிக்கும் தேகம் கண்டேன்…
இதுவும் புதிய உணா்வு அல்லவா…
பெண் : காதல் பேச்சில் பொய் பூசுவாய்…
மயங்கும் வேளையில் மை பூசுவாய்…
விலக நினைத்தால் கண் வீசுவாய்…
தவித்தேன் தவித்தேன் கிடந்து தவித்தேன்…
தவித்தேன் தவித்தேன் தவித்தேன் தவித்தேன்…
பெண் : எது எது என்னை வருடி போவது…
எது எது என்னை திருடி போவது…
எது எது என்னை முழுதும் சாய்த்தது…
நெருப்பும் பனியும் நெருங்குகிறதே…
பெண் : திரு திருவென விழித்து பாா்க்கிறேன்…
திசை அனைத்திலும் உன்னை காண்கிறேன்…
நொடிக்கொரு முறை துடித்து போகிறேன்…
எனது பெயரையும் மறந்து நடக்கின்றேன்…
—BGM—
ஆண் : ஓ மாயா ஓ மாயா…
நீ இல்லாமல் நான் இல்லை மாயா…
ஓ மாயா ஓ மாயா…
நீ இல்லாமல் நான் இல்லை மாயா…
பெண் : அருகில் இருந்தால் உன் வாசனை…
தொலைவில் இருந்தால் உன் யோசனை…
எனக்குள் தினமும் உன் பாவனை…
இனிமேல் எனது பயணம் சுகமே…
பெண் : இதமாய் உணா்ந்தேன் உன் காதலை…
மாறுது என் வானிலை…
இருவாில் யாரும் யாரோ இல்லை…
கனவும் நினைவும் இணைந்து வருதே…
வருதே வருதே…
—BGM—
Notes : Tharai Erangiya Song Lyrics in Tamil. This Song from Eeram (2009). Song Lyrics penned by Viveka. தரை இறங்கிய பாடல் வரிகள்.