பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி | இளையராஜா | தூறல் நின்னுபோச்சு |
Thanga Sangili Song Lyrics in Tamil
பெண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…
—BGM—
பெண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…
பெண் : மலர்மாலை தலையணையாய் சுகமே பொதுவாய்…
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி…
பெண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…
—BGM—
ஆண் : காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி…
உன்சேலையில் பூவேலைகள்…
உன்மேனியில் பூஞ்சோலைகள்…
பெண் : அந்தி பூவிரியும் அதன்ரகசியம்…
சந்தித்தால் தெரியும்…
இவளின் கனவு தணியும் வரையில் விடியாது…
திருமகள் இரவுகள்…
ஆண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…
—BGM—
பெண் : ஆடும் பொம்மை மீது…
ஜாடை சொன்ன மாது…
ஆண் : ல ல ல ல லாலா… லாலா லாலா லாலா…
பெண் : கண்ணோடுதான் போராடினாள்…
வேர்வைகளில் நீராடினாள்…
ஆண் : ரா ரா ரா ரா ரரரரா… ரரரா ரா ரா…
ஆண் : அன்பே ஆடை கொடு என்னை அனுதினம்…
அள்ளிச் சூடி விடு…
பெண் : இதழில் இதழால் கடிதம் எழுது…
ஒரு பேதை உறங்கிட மடி கொடு…
ஆண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…
பெண் : மலர்மாலை தலையணையாய் சுகமே பொதுவாய்…
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி…
பெண் & ஆண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…
Notes : Thanga Sangili Song Lyrics in Tamil. This Song from Thooral Ninnu Pochu (1982). Song Lyrics penned by Vairamuthu. தங்கச் சங்கிலி பாடல் வரிகள்.