பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | கே.ஜே. யேசுதாஸ் & பி. சுசீலா | இளையராஜா | பூந்தோட்ட காவல்காரன் |
Sindhiya Venmani Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
என் பொண்ணம்மா…
ஆண் : சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்…
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…
ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
—BGM—
ஆண் : பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்…
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்…
பெண் : அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்…
அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்…
ஆண் : இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்…
பெண் : இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்…
ஆண் : மெல்லிய நூலிடை வாடியதே…
மன்மத காவியம் மூடியதே…
—BGM—
ஆண் & பெண் : அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்…
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே…
ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
என் பொண்ணம்மா…
ஆண் : சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்…
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…
ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
—BGM—
ஆண் : தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்…
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே…
பெண் : காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்…
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே…
ஆண் : வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்…
பெண் : எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்…
ஆண் : என் மகன் காவிய நாயகனே…
என் உயிர் தேசத்து காவலனே…
—BGM—
ஆண் : வாடிய பூமியில் கார்முகிலாய்…
மழை தூவிடும் மானுடன் என் மகனே…
ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
என் பொண்ணம்மா…
ஆண் : சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்…
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…
ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
Notes : Sindhiya Venmani Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaran. சிந்திய வெண்மணி பாடல் வரிகள்.