பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | பூந்தோட்ட காவல்காரன் |
Paadatha Themmangu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே…
பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே…
பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி…
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி…
ஆண் : யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி…
சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி…
பாடாத தெம்மாங்கு…
—BGM—
ஆண் : முன்னாடி வாழ்க்கை…
கல்லு பட்ட கண்ணாடி போல…
என் பொண்டாட்டி வாழ்க்கை…
முள்ளு மேல பட்டாட போல…
ஆண் : முன்னாடி வாழ்க்கை…
கல்லு பட்ட கண்ணாடி போல…
என் பொண்டாட்டி வாழ்க்கை…
முள்ளு மேல பட்டாட போல…
ஆண் : பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம…
தள்ளாடி நின்னேனே நான்தானே…
பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம…
தள்ளாடி நின்னேனே நான்தானே…
ஆண் : தோளில் போட்டவ என் தாயி…
என் சோகம் தீர்த்திட வாதாயி…
ஏ… சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல…
வந்தத விட்டு நின்னேனே…
நிம்மதி என்னைக்கு என்கிட்ட வந்திடுமோ…
ஆண் : பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே…
பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே…
—BGM—
ஆண் : புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட…
என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட…
புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட…
என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட…
ஆண் : கையெடுத்து தந்தேனே…
காவலுக்கு நின்னேனே…
கண்ணீரு ஏனம்மா பூமானே…
ஆண் : கையெடுத்து தந்தேனே…
காவலுக்கு நின்னேனே…
கண்ணீரு ஏனம்மா பூமானே…
ஆண் : சாமி கொடுக்கல குழந்தை வரம்…
உன்னாலே பேர புள்ள நூறு வரும்…
அட வந்தது எல்லாம் வந்தது இல்ல…
போவது எல்லாம் போவது இல்ல…
இன்னைக்கு நீ தந்த நிம்மதி போதுமம்மா…
ஆண் : பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே…
பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே…
ஆண் : பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி…
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி…
யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி…
ஹான்… சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி…
பாடாத தெம்மாங்கு…
Notes : Paadatha Themmangu Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaren. பாடாத தெம்மாங்கு பாடல் வரிகள்.