பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | தென்றலே என்னைத் தொடு |
Pudhiya Poovithu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : புதிய பூவிது பூத்தது…
இளைய வண்டுதான் பாத்தது…
ஆண் : தூது வந்ததோ…
சேதி சொன்னதோ…
தூது வந்ததோ சேதி சொன்னதோ…
நாணம் கொண்டதோ… ஏன்…
பெண் : ஐ லவ் யு…
புதிய பூவிது பூத்தது…
இளைய வண்டு தான் பாத்தது…
—BGM—
பெண் : ஜவ்வாது பெண்ணானது…
இரண்டு செம்மீன்கள் கண்ணானது…
ஆண் : பன்னீரில் ஒண்ணானது…
பாச பந்தங்கள் உண்டானது…
பெண் : என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ…
ஆண் : கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ…
பெண் : என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ…
ஆண் : கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ…
பெண் : தள்ளாடும் தேகங்களே…
கோவில் தெப்பங்கள் போலாடுமோ…
ஆண் : சத்தமின்றியே முத்தமிட்டதும் கும்மாளம்தான் வா…
பெண் : புதிய பூவிது பூத்தது…
இளைய வண்டு தான் பாத்தது…
பெண் : தூது வந்ததோ…
சேதி சொன்னதோ…
தூது வந்ததோ சேதி சொன்னதோ…
காதல் கொண்டதோ… சொல்…
ஆண் : புதிய பூவிது பூத்தது…
இளைய வண்டு தான் பாத்தது…
—BGM—
ஆண் : கல்யாணம் ஆகாமலே…
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது…
பெண் : கூடாது கூடாதென…
நாணம் காதோடு சொல்கின்றது…
ஆண் : என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ…
பெண் : உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ…
ஆண் : என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ…
பெண் : உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ…
ஆண் : தண்டோடு பூவாடுது…
வண்டு தாகங்கள் கொண்டாடுது…
பெண் : உன்னை கண்டதும்…
என்னை கண்டதும்…
உண்டாகுமோ தேன்…
ஆண் : புதிய பூவிது பூத்தது…
பெண் : இளைய வண்டு தான் பாத்தது…
ஆண் : தூது வந்ததோ…
பெண் : சேதி சொன்னதோ…
ஆண் : தூது வந்ததோ…
பெண் : சேதி சொன்னதோ…
ஆண் : நாணம் கொண்டதோ… ஏன்…
பெண் : புதிய பூவிது பூத்தது…
ஆண் : இளைய வண்டுதான் பாத்தது…
Notes : Pudhiya Poovithu Song Lyrics in Tamil. This Song from Thendrale Ennai Thodu (1985). Song Lyrics penned by Vaali. புதிய பூவிது பாடல் வரிகள்.