பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. காமராசன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | காக்கிசட்டை (1985) |
Vaanile Thennila Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே…
நாமும் கொஞ்சம் ஆடலாமா…
ஆசை தீரும் நேரமே ஆடை நான்தானே…
பெண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே…
நாமும் கொஞ்சம் ஆடலாமா…
ஆசை தீரும் நேரமே ஆடை நான்தானே…
ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…
—BGM—
ஆண் : வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்…
வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன்…
பெண் : மூங்கில் காட்டில் காதல் ஊஞ்சல் போடவா…
காமன் தேசம் போகும் தேரில் ஆடவா…
ஆண் : ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே…
வானம் தாலாட்டுதே வா…
பெண் : நாளும் மார் மீதிலே ஆடும் பூவை…
தோளில் யார் சூடுவார் தேவனே…
ஆண் : மைவிழி பைங்கிளி மன்னவன்…
பூங்கொடி மார்பிலே…
மைவிழி பைங்கிளி மன்னவன்…
பூங்கொடி மார்பிலே தேவனே சூடுவான்…
பெண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…
ஆண் : மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே…
நாமும் கொஞ்சம் ஆடலாமா…
பெண் : ஆசை தீரும் நேரமே ஆடை நான்தானே…
ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…
—BGM—
பெண் : பூவை போல தேகம் மாறும் தேவதை…
பார்வை போதும் மேடை மேலே ஆடுதே…
ஆண் : பாதி கண்கள் மூடும் காதல் தேவியே…
மோக ராகம் பாடும் தேவன் வீணையே…
பெண் : மன்னன் தோல் மீதிலே மஞ்சம் கண்டேன்…
மாலை பூங்காற்றிலே நான்…
ஆண் : ஆடும் பொன் மேகமே ஓடும் வானம்…
காதலின் ஆலயம் ஆனதே…
பெண் : கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்…
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்…
ஓவியம் தீட்டுதே…
ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…
பெண் : மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே…
நாமும் கொஞ்சம் ஆடலாமா…
ஆண் : ஆசை தீரும் நேரமே ஆடை நான்தானே… ஓ…
பெண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…
ஆண் : மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே…
நாமும் கொஞ்சம் ஆடலாமா…
Notes : Vaanile Thennila Song Lyrics in Tamil. This Song from Kakki Sattai (1985). Song Lyrics penned by Na. Kamarasan. வானிலே தேனிலா பாடல் வரிகள்.