சாலையோரம் சோலை ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபயணங்கள் முடிவதில்லை

Salaiyoram Solai Ondru Song Lyrics in Tamil


BGM

பெண் : சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…
சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…

பெண் : கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து…
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து…
சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…

BGM

ஆண் : பாவை இவள் பார்த்து விட்டால்…
பாலைவனம் ஊற்றெடுக்கும்…

BGM

ஆண் : கண்ணிமைகள்தான் அசைந்தால்…
நந்தவனக் காற்றடிக்கும்…

பெண் : நீங்கள் என்னை பார்த்தால் குளிர் எடுக்கும்…
மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும்…

ஆண் : ஹேய்… பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்…
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்…

பெண் : மொட்டுக்கதவை பட்டு வண்டுகள் தட்டுகின்றதே இப்போது…

பெண் : சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…

ஆண் : கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து…
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து…
சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…

BGM

பெண் : கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க…

BGM

பெண் : அலை வந்து அழித்ததினால் கன்னி மனம்தான் துடிக்க…

ஆண் : கடலுக்கு கூட ஈரமில்லையோ…
நியாயங்களை கேட்க யாருமில்லையோ…

பெண் : சேர்த்து வைத்த தாகம்…
கண்ணால் இன்று கீறும்…
சேர்த்து வைத்த தாகம்…
கண்ணா இன்று கீறும்…

ஆண் : பேசும் கிள்ளையே ஈர முல்லையே…
நேரமில்லையே இப்போது…

ஆண் : சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…

பெண் : கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து…
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து…

ஆண் & பெண் : தாராதாத்தா தாராதாத்தா தா தாரா ரா…


Notes : Salaiyoram Solai Ondru Song Lyrics in Tamil. This Song from Payanangal Mudivathillai (1982). Song Lyrics penned by Vairamuthu. சாலையோரம் சோலை ஒன்று பாடல் வரிகள்.


Scroll to Top