sakkarai-nilavea-song-lyrics

சக்கரை நிலவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாிஷ் ராகவேந்திராமணி சா்மாயூத்

Sakkarai Nilavea Song Lyrics in Tamil


BGM

ஆண் : சக்கரை நிலவே பெண் நிலவே…
காணும் போதே கரைந்தாயே…
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…

ஆண் : சக்கரை நிலவே பெண் நிலவே…
காணும் போதே கரைந்தாயே…
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…

ஆண் : மனம் பச்சை தண்ணிதான் பெண்ணே…
அதை பற்ற வைத்தது உன் கண்ணே…
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து…
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே…

ஆண் : கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா…

ஆண் : சக்கரை நிலவே பெண் நிலவே…
காணும் போதே கரைந்தாயே…
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…

BGM

ஆண் : காதல் என்ற ஒன்று அது கடவுள் போல…
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை…
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல…
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை…

ஆண் : அன்பே உன் புன்னகை எல்லாம்…
அடி நெஞ்சில் சேமித்தேன்…
கண்ணே உன் புன்னகை எல்லாம்…
கண்ணீராய் உருகியதேன்…

ஆண் : வெள்ளை சிரிப்புகள் உன் தவறா…
அதில் கொள்ளை போனது என் தவறா…
பிரிந்து சென்றது உன் தவறா…
நான் புரிந்து கொண்டது என் தவறா…
ஆண் கண்ணீா் பருகும் பெண்ணின் இதயம்…
சதையல்ல கல்லின் சுவரா…

ஆண் : கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா…

BGM

ஆண் : நவம்பா் மாத மழையில்…
நான் நனைவேன் என்றேன்…
எனக்கும் கூட நனைதல்…
மிக பிடிக்கும் என்றாய்…

ஆண் : மொட்டை மாடி நிலவில்…
நான் குளிப்பேன் என்றேன்…
எனக்கும் அந்த குளியல்…
மிக பிடிக்கும் என்றாய்…

ஆண் : சுகமான குரல் யார் என்றால்…
சுசீலாவின் குரல் என்றேன்…
எனக்கும் அந்த குரலில் ஏதோ…
மயக்கம் என நீ சொன்னாய்…

ஆண் : கண்கள் மூடிய புத்தா் சிலை…
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்…
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி…
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்…

ஆண் : அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க…
என்னை ஏன் பிடிக்காதென்றாய்…

ஆண் : கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா…

BGM


Notes : Sakkarai Nilavea Song Lyrics in Tamil. This Song from Youth (2002). Song Lyrics penned by Vairamuthu. சக்கரை நிலவே பாடல் வரிகள்.