பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலா | கே.வி. மகாதேவன் | அடிமைப் பெண் |
Aayiram Nilave Vaa Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…
இதழோரம் சுவை தேட…
புதுப் பாடல் விழி பாட பாட…
ஆண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…
இதழோரம் சுவை தேட…
புதுப் பாடல் விழி பாட பாட…
ஆண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…
—BGM—
ஆண் : நல்லிரவு துணையிருக்க…
நாமிருவர் தனியிருக்க…
நாணமென்ன பாவமென்ன…
நடைதளர்ந்து போனதென்ன…
ஆண் : நல்லிரவு துணையிருக்க…
நாமிருவர் தனியிருக்க…
நாணமென்ன பாவமென்ன…
நடைதளர்ந்து போனதென்ன…
ஆண் : இல்லை உறக்கம்…
ஒரே மனம் என்னாசை பாராயோ…
இல்லை உறக்கம்…
ஒரே மனம் என்னாசை பாராயோ…
ஆண் : என் உயிரிலே உன்னை எழுத…
பொன்மேனி தாராயோ…
ஆண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…
—BGM—
பெண் : மன்னவனின் தோளிரண்டை…
மங்கை எந்தன் கை தழுவ…
கார் குழலும் பாய் விரிக்கும்…
கண் சிவந்து வாய் வெளுக்கும்…
பெண் : மன்னவனின் தோளிரண்டை…
மங்கை எந்தன் கை தழுவ…
கார் குழலும் பாய் விரிக்கும்…
கண் சிவந்து வாய் வெளுக்கும்…
பெண் : இந்த மயக்கம் எழில் முகம்…
முத்தாக வேர்க்காதோ…
இந்த மயக்கம் எழில் முகம்…
முத்தாக வேர்க்காதோ…
பெண் : அந்த நினைவில் வந்து விழுந்தேன்…
கொத்தான பூவாக…
பெண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…
இதழோரம் சுவை தேட…
புதுப் பாடல் விழி பாட பாட…
ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…
—BGM—
ஆண் : பொய்கை எனும் நீர்மகளும்…
பூவாடை போர்த்திருந்தாள்…
பெண் : ஆஆ… தென்றல் எனும் காதலனின்…
கை விலக்க வேர்த்து நின்றாள்…
ஆண் : பொய்கை எனும் நீர்மகளும்…
பூவாடை போர்த்திருந்தாள்…
பெண் : ஆஆ… தென்றல் எனும் காதலனின்…
கை விலக்க வேர்த்து நின்றாள்…
ஆண் : என்ன துடிப்போ…
அவள் நிலை நீ உணர மாட்டாயோ…
என்ன துடிப்போ…
அவள் நிலை நீ உணர மாட்டாயோ…
பெண் : அந்த நிலையில்…
ஆண் : அந்த சுகத்தை…
பெண் : நான் உணரக் காட்டாயோ…
ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…
இதழோரம் சுவை தேட…
புதுப் பாடல் விழி பாட பாட…
ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…
Notes : Aayiram Nilave Vaa Song Lyrics in Tamil. This Song from Adimai Penn (1969). Song Lyrics penned by Pulamaipithan. ஆயிரம் நிலவே வா பாடல் வரிகள்.