raakaachi-rangamma-song-lyrics

ராக்காச்சி ரங்கம்மா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்அனிதா கார்த்திகேயன்சித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Raakaachi Rangamma Song Lyrics in Tamil


BGM

பெண் : ராக்காச்சி ரங்கம்மா…
ராசாத்தி மங்கம்மா…
டார்லிங்கா டார்ச்சர்ரா…
பாத்தாலம்மா…

பெண் : ஆகாட்டி அங்கம்மா…
அக்மார்க்கு தங்கம்மா…
காத்தாடி நூலா அந்து…
போனாலம்மா…

பெண் : தார் சாலை சிங்கம்தான்…
சேலன்ஞ் பண்ணிதான்…
வந்தானே தொல்லை தந்தானே…

பெண் : ஏ… கோளாறு இல்லாத…
பூலோகம் காணாத…
மாப்பிள்ளை கேட்குறானே… ஏ… ஏ…

பெண் : பாவமே பாக்காம…
வச்சிதான் செய்யிறான்…
வெத வெதமா போட்டோ பார்த்தும்…
வேணான்னு சொல்லுறான்…

பெண் : ரன்வீரும் ரன்பீரும்…
மிக்ஸ் ஆக்கி கேட்க்குறான்…
இவனோட அக்கா என்ன…
தீபிகா படுகோன்னா…

BGM

பெண் : ஏதேதோ தொல்லை தந்து போனாலும்…
இவன் மேல கோவம் வல்லை…
அது ஏன்னு இவள கேள்வி கேட்டாக்கா…
அட கமுக்கமா சிரிப்பா உள்ள…

குழு (பெண்கள்) : புரியாத ஒன்னு…
அவளையும் இவனையும் பூட்டுது…
அறியாம நெஞ்சு…
அடிக்கடி அடிதடி பண்ணுது…

பெண் : இவனோட உள்ளம் வெள்ளை…
விழுந்துட்டா படிச்ச புள்ள…
அடடா எலியும் புலியும்…
மனசைத்தான் மாத்திக்கிச்சே…

பெண் : ராக்காச்சி ரங்கம்மா…
ராசாத்தி மங்கம்மா…
டார்ச்சர்ரா டார்லிங்கா…
பாத்தாலம்மா…

பெண் : ஆகாட்டி அங்கம்மா…
அக்மார்க்கு தங்கம்மா…
சில்வண்ட போல சுத்தி…
வந்தாலம்மா…

பெண் : டா போட்டா டேலண்ட்டா…
டி போட்டான் டீசன்ட்டா…
ராவெல்லாம் வாட்ஸ்அப் கலாட்டா…

பெண் : அவ தீ வெச்சா சைலண்டா…
பத்திதான் வையேன்டா…
நாள் எல்லாம் போச்சே நோ என்டா…

பெண் : பொல்லாத புள்ளான்டான்…
நிக்காம வெள்ளான்டான்…
ரக ரகமா ரகள செஞ்சி…
இவ மனசு களவான்டான்…

பெண் : கில்லாடி சுள்ளான்டான்…
நெஞ்செல்லாம் உட்காந்தான்…
ஒரு உறவ தேடி வந்து…
புது உறவ கொண்டாந்தான்…


Notes : Raakaachi Rangamma Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. ராக்காச்சி ரங்கம்மா பாடல் வரிகள்.