பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | எஸ். ஜானகி | இளையராஜா | முரட்டுக்காளை |
Puthu Vannangal Song Lyrics in Tamil
—BGM—
பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…
பெண் : செந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள…
பூங்குயில் பாடுது பாட்டு…
வண்ண மாமயில் ஆடுது கேட்டு…
பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
—BGM—
பெண் : மண்ணிலே வளர்ந்த கொடி…
படர்ந்தது மரத்திலடி…
பொன்னிலே நனைந்தது போல்…
மலர்ந்தது வசந்தமடி…
பெண் : பிஞ்சுகள் காய்த்து கனிந்தாட…
மொட்டுகள் பூத்து விரிந்தாட…
கள்ளில் மயங்கும் வண்டுபோல்…
சுவை கண்டு மயங்குது கண்விழி…
பெண் : உல்லாசம் பண்பாடி உற்சாகம் கொண்டாட…
உள்ளத்தில் பொங்குது ஆசை…
பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…
பெண் : செந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள…
பூங்குயில் பாடுது பாட்டு…
வண்ண மாமயில் ஆடுது கேட்டு…
—BGM—
பெண் : அன்பிலே இணைந்த சிட்டு…
மறைந்தது கூட்டிலடி…
ரெண்டிலே ஒன்றை கண்டு…
பிறந்தது நாணமடி…
பெண் : இன்று நான் மலர்ந்த பெண்ணானேன்…
என்னவோ மயக்கம் கொண்டேனே…
நெஞ்சில் நினைத்ததை சொல்லவோ…
அத சொல்ல தயங்குது பெண்மையே…
பெண் : ஒன்றோடு ஒன்றாக எந்நாளும் கொண்டாட…
உள்ளத்தில் வந்தது ஆசை…
பெண் : புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…
பெண் : செந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள…
பூங்குயில் பாடுது பாட்டு…
வண்ண மாமயில் ஆடுது கேட்டு…
—BGM—
Notes : Puthu Vannangal Song Lyrics in Tamil. This Song from Murattu Kaalai (1980). Song Lyrics penned by Panchu Arunachalam. புது வண்ணங்கள் பாடல் வரிகள்.