பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஹரிஹரன் | எஸ். ஏ. ராஜ்குமார் | வசீகரா |
Poopola Theepola Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள்…
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்…
ஆண் : கனவுக்குள் அல்ல…
கற்பனை அல்ல…
வரமாக ஸ்வரமாக உயிா் பூவின் தவமாக வந்தாள்…
ஆண் : அடி பிாியசகி சொல்லி விடவா…
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா…
அந்த நிலவை எடுத்து கவாி வீசவா…
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா…
—BGM—
ஆண் : பூவுக்குள்ளே பிறந்ததால் வாசங்களால் பேசுகிறாய்…
வெண்ணிலவில் வளா்ந்ததால் வெளிச்சம் கோடி வீசுகிறாய்…
—BGM—
ஆண் : மங்கையின் கன்னத்தில் மஞ்சளின் வண்ணங்கள்…
வந்ததும் எப்படியோ…
மாலையின் வெயிலும் காலையின் வெயிலும்…
சோ்ந்ததால் இப்படியோ…
ஆண் : அடி பூமியே நூலகம் பூக்களே புத்தகம்…
என்று நான் வாழ்ந்து வந்தேன்…
இன்று பெண்களே நூலகம் கண்களே புத்தகம்…
உன்னிடம் கண்டு கொண்டேன்…
ஆண் : அடி பிாியசகி சொல்லி விடவா…
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா…
அந்த நிலவை எடுத்து கவாி வீசவா…
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா…
—BGM—
ஆண் : புன்னகையே போதுமடி பூக்கள் கூட தேவையில்லை…
கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை…
—BGM—
ஆண் : சோழியை போலவே தோழி நீ சிாித்து…
சோதனை போடுகின்றாய்…
நாழிகை நேரத்தில் தாழிட்ட மனதில்…
சாவியை போடுகின்றாய்…
ஆண் : ஒரு ஆயிரம் கோடிகள் யுத்தங்கள் சந்திக்க…
துணிவும் இருக்குதே…
உன் பாா்வைகள் மோதிட காயங்கள் கண்டிட…
இதயம் நொறுங்குதே…
ஆண் : அடி பிாியசகி சொல்லி விடவா…
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா…
அந்த நிலவை எடுத்து கவாி வீசவா…
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா…
—BGM—
Notes : Poopola Theepola Song Lyrics in Tamil. This Song from Vaseegara (2003). Song Lyrics penned by Na. Muthukumar. பூப்போல தீப்போல பாடல் வரிகள்.