பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | தேவேந்திரன் | மண்ணுக்குள் வைரம் |
Pongiyathe Kathal Vellam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…
பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…
ஆண் : கண்ணில் நிலா முகம் உலவியது…
எந்தன் மனம் தினம் இளகியது…
கண்ணில் நிலா முகம் உலவியது…
எந்தன் மனம் தினம் இளகியது…
இருவிழியில் நவரசமோ வழியுது…
அனுபவம் இனியது புதியது…
ஆண் : பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…
—BGM—
ஆண் : பள்ளிப் பாடம் வாசித்தால்…
—BGM—
ஆண் : பள்ளிப் பாடம் வாசித்தால்…
நீதானே கண்ணில் வந்தாய்…
பொன் மேகம் விண்ணோடு…
எந்நாளும் என்னுள்ளம் உன்னோடு…
உன்னோடு உன்னோடு…
பெண் : எந்த சொந்தம் யாரோடு…
யாரிங்கே சொல்லக்கூடும்…
காலம் நேரம் சேரட்டும்…
கன்னிப் பூ மாலை சூடும்…
பெண் : பண்பாடு மாறாமல் எப்போதும்…
பண்பாடு என்னோடு என்னோடு…
என்னோடு என்னோடு…
ஆண் : கடல் கூட குளமாகும்…
என் காதல் மாறாது…
பெண் : பொங்கியதே காதல் வெள்ளம்…
ஆண் : ஆஹா… துள்ளியதே ஆசை உள்ளம்…
—BGM—
பெண் : ஏழை முல்லை பெண் பிள்ளை…
—BGM—
பெண் : ஏழை முல்லை பெண் பிள்ளை…
சொல்லத்தான் வார்த்தை இல்லை…
என் பெண்மை தாளாது…
என்றாலும் இப்போது சொல்லாது…
சொல்லாது சொல்லாது சொல்லாது…
ஆண் : கண்ணால் பாரு பெண் பூவே…
வாய் வார்த்தை தேவை இல்லை…
உன்னைப் பற்றி கவி பாட…
ஊமைக்கு ஞானம் இல்லை…
ஆண் : நீரின்றி மீனில்லை அம்மாடி…
நீயின்றி நானில்லை…
நானில்லை நானில்லை…
பெண் : உனக்காக என் பெண்மை…
தவம் செய்தால் தப்பில்லை…
ஆண் : பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…
பெண் : கண்ணில் நிலா முகம் உலவியது…
எந்தன் மனம் தினம் இளகியது…
இரு விழியில் நவரசமோ வழியுது…
அனுபவம் இனியது புதியது…
பெண் : பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…
Notes : Pongiyathe Kathal Vellam Song Lyrics in Tamil. This Song from Mannukul Vairam (1986). Song Lyrics penned by Vairamuthu. பொங்கியதே காதல் பாடல் வரிகள்.