பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்துலிங்கம் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | தேவேந்திரன் | மண்ணுக்குள் வைரம் |
Muthu Sirithathu Song Lyrics in Tamil
{ குழு : ஹேய்… பொங்கி சிரிக்கிற தங்கச் சிலைக்கொரு…
குங்குமத்தை இடுங்க…
ஹேய்… பூத்து குலுங்கிடும் நந்தவனத்துக்கு…
ஆரத்தியும் எடுங்க…
குழு : பொன்னாரத்த பூவாரத்த போடு…
பொட்டுக் கரைந்திட முத்தம் கொடுக்க வாங்க… } * (2)
குழு : முத்து சிரித்தது முல்லை வெடித்தது…
முத்திரை இட்டிட சித்திரை வந்தது…
மானே மலைத்தேனே…
குழு : இவ செந்தூர பொட்டு வச்சா இப்போது…
இன்பத் தேரேறி செல்லும் காலம் எப்போது…
இவ செந்தூர பொட்டு வச்சா இப்போது…
இன்பத் தேரேறி செல்லும் காலம் எப்போது…
ஆண் : முத்து சிரித்தது முல்லை வெடித்தது…
முத்திரை இட்டிட சித்திரை வந்தது…
மானே மலைத்தேனே…
பெண் : ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே…
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே…
ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே…
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே…
—BGM—
ஆண் : முல்லை மலர்க்கொடியே பக்கம் வந்தாலென்ன…
மோக வண்ணக் குயிலே சொர்க்கம் தந்தாலென்ன…
பெண் : கொத்து மலர்க்கொடியை நீயும் தொட்டாலென்ன…
முத்து மணிச்சரத்தில் கையும் பட்டாலென்ன…
ஆண் : தேன் கனியே அழைக்கையில்…
மாங்கிளிதான் மறுக்குமா…
பெண் : வான் மழை போல் பொழிகையில்…
பூமரம்தான் தடுக்குமா…
ஆண் : அழகிய கலை நிலவே வா அருகே வா…
இதயமும் ஏங்குது இரு விழி மயங்குது…
—BGM—
ஆண் : முத்து சிரித்தது முல்லை வெடித்தது…
முத்திரை இட்டிட சித்திரை வந்தது…
மானே மலைத்தேனே…
பெண் : ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே…
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே…
குழு : ஹேய்… வெள்ளைக் கிளியொன்று பச்சை நிறம் கொண்டு…
துள்ளி சிரிக்கிறதே…
ஹேய்… பட்டு ரவிக்கையில் சிட்டுக்குருவியும்…
கண்ணைப் பறிக்கிறதே…
குழு : பொன்னாரத்த பூவாரத்த போடு…
பொட்டுக் கரைந்திட முத்தம் கொடுக்க வாங்க…
—BGM—
பெண் : உன்னை எண்ணும்பொழுது நாணம் உண்டாகுது…
ஆசை என்னும் அலைகள் என்னை பந்தாடுது…
ஆண் : கன்னி விழி அசைவில் காதல் தேர் ஓடுது…
காதல் இளமைகள் அன்பில் நீராடுது…
பெண் : நான் உனக்கெனவே பிறந்தவள்…
நீ தொடவே மலர்ந்தவள்…
ஆண் : உன்னருகே இருக்கையில்…
உன் உலகம் தெரியுது…
பெண் : விருந்துன்னை அழைக்கிறதே வா விரைந்தே வா…
மனம் தரும் பூவிது மன்னனிடம் மயங்குது…
—BGM—
ஆண் : முத்து சிரித்தது முல்லை வெடித்தது…
முத்திரை இட்டிட சித்திரை வந்தது…
மானே மலைத்தேனே…
பெண் : ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே…
புது சங்கீதம் நானும் பாட வந்தேனே…
பெண் & ஆண் : ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே…
புது சங்கீதம் நானும் பாட வந்தோமே…
Notes : Muthu Sirithathu Song Lyrics in Tamil. This Song from Mannukul Vairam (1986). Song Lyrics penned by Muthulingam. முத்து சிரித்தது பாடல் வரிகள்.