pongalo-pongal-song-lyrics

பொங்கலோ பொங்கல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராஇளையராஜாமகாநதி

Pongalo Pongal Song Lyrics in Tamil


—BGM—

குழு : பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…

—BGM—

பெண் : தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு…
அன்பின் அன்னையடி…
இவள் தண்ணீர் என்றொரு ஆடைக் கட்டிடும்…
தெய்வ மங்கையடி…

குழு : ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…
ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…
ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…
ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…

குழு : தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…

—BGM—

பெண் : முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால…
கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால…
சேத்தோட சேர்ந்த விதை நாத்து விடாதா…
நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா…

பெண் : செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம்தான்…
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம்தான்…

குழு : நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது…
வானில் இல்லையடி…
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது…
கனவில் இல்லையடி…

பெண் : தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு…
அன்பின் அன்னையடி…
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்…
தெய்வ மங்கையடி…


Notes : Pongalo Pongal Song Lyrics in Tamil. This Song from Mahanadhi (1994). Song Lyrics penned by Vaali. பொங்கலோ பொங்கல் பாடல் வரிகள்.