| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | மது பாலகிருஷ்ணன் | வித்யாசாகர் | மொழி |
Pesaa Madandhaiye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பேசா மடந்தையே…
விழி பேசும் சித்திரமே…
சேலைக் குழந்தையே…
என் செல்லக் கலவரமே…
ஆண் : இதயமென்னும் பூ பறித்தேன்…
நரம்பு கொண்டு சரம் தொடுத்தேன்…
கையில் கொடுத்தேன் கண்ணே…
நீ காலில் மிதித்தாய் பெண்ணே…
ஆண் : பேசா மடந்தையே…
விழி பேசும் சித்திரமே…
சேலைக் குழந்தையே…
என் செல்லக் கலவரமே…
—BGM—
ஆண் : ஏழு நிறங்களை எண்ணி முடிக்கும் முன்…
வானவில் கரைந்தது பாதியிலே…
மறுபடி தோன்றுமா பார்வையிலே…
ஆண் : பெண்ணின் மனநிலை கண்டு தெளியும் முன்…
வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே…
வானம் நடுங்குது மயக்கத்திலே…
ஆண் : காதலை சொல்லி கரம் குவித்தேன்…
கருப்புக்கு பழி என்று கலங்குகிறாய்…
பூஜைக்கு உனக்கு பூ பறித்தேன்…
பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய்…
ஆண் : வார்த்தைகளால் காதலித்தேன்…
ஜாடைகளால் சாகடித்தாய்…
மழைதான் கேட்டேன் பெண்ணே…
இடி மின்னல் தந்தாய் கண்ணே…
ஆண் : பேசா மடந்தையே…
விழி பேசும் சித்திரமே…
—BGM—
ஆண் : மூங்கில் காட்டிலே தீயும் அழகுதான்…
ஆனால் அதை நான் ரசிக்கவில்லை…
ஐயோ இதயம் பொறுக்கவில்லை…
ஆண் : கோபம் மூழ்கையில் நீயும் அழகுதான்…
ஆனால் அதை நான் சுகிக்கவில்லை…
சகியே என் மனம் சகிக்கவில்லை…
ஆண் : உன் சினம் கண்டு என் இதயம்…
உடம்புக்கு வெளியே துடிக்குதடி…
உன் மனம் இரண்டாய் உடைந்ததென்று…
என் மனம் நான்காய் உடைந்ததடி…
ஆண் : விதை உடைந்தால் செடி முளைக்கும்…
மனம் உடைந்தால் புல் முளைக்கும்…
தண்டனை என்பது எளிது…
உன் மௌனம் வாளினும் கொடியது…
ஆண் : பேசா மடந்தையே…
விழி பேசும் சித்திரமே…
சேலைக் குழந்தையே…
என் செல்லக் கலவரமே…
Notes : Pesaa Madandhaiye Song Lyrics in Tamil. This Song from Mozhi (2007). Song Lyrics penned by Vairamuthu. பேசா மடந்தையே பாடல் வரிகள்.
